புதன், 24 டிசம்பர், 2008

உலகமயமாக்கலும் நானும்!

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் 10 வது வகுப்பு படித்து கொண்டிருந்த காலகட்டத்தில் மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் அரசு பொருளாதார தாரளமயமாக்கல் கொள்கைகளை அறிவித்தது. ஏற்றுமதி, இறக்குமதி சட்டங்களை இலகுவாக்கி இந்தியாவை உலகிற்கு திறந்து விட்டது. Foreign Direct Investment எனப்படும் அயல் நாட்டுகாரர்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதற்கு வழி வகுத்தது. தொலை தொடர்பு, மின்சாரம், வங்கி என்று இந்திய அரசாங்கம் ஆதிக்கம் செய்து வந்த பல துறைகளில் தனியாருக்கும் இடம் உண்டு என்று அறிவித்தது . அயல்நாடுகள் கணிசமாக இந்தியாவில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். PEPSI, IBM, NESTLE என்று அனைத்து ஜாம்பவான்களும் இந்தியாவில் கடையை விரிக்க ஆரம்பித்தார்கள். இந்தயாவில் உலகமயமாக்கல் ஆரம்பமானது.!

அடுத்த 5 ஆண்டுகளில் இதன் விளைவை இந்தியா உணர ஆரம்பித்தது. மக்கள் கையில் காசு புரள ஆரம்பித்தது . 5 இலக்க சம்பளம் சாதரணமானது. 6 இலக்க சம்பளமும் சாத்தியமானது. 30 வருடம் அரசாங்க பணியில் பணி புரிபவர்கள் கூட முக்கு முக்குவென முக்கி 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் போது அவரது மகன் /மகள் முதல் மாத சம்பளமாக 15 ஆயிரம் வாங்கியது பெற்றோர்களுக்கு பெருமையாக இருந்தாலும் காதில் புகையையும் வரவழைத்து. நடுத்தர மனிதனுக்கு விமானம் சாத்தியமானது. ரயில்வேயை தவிர தொலைபேசி, மின்சாரம், வங்கி என்று அனைத்து துறைகளிலும் தனியார்கள் புகுந்தார்கள். நல்ல தரமான சேவை மலிவான விலையில் கிடைத்தது. வங்கியில் 100 ரூபாய் எடுக்க 1/2 நாள் விடுப்பு எடுத்து வங்கியில் வரிசையில் நிற்க வேண்டும் என்ற நிலை மாறி இரவு 10 மணிக்கு கூட ATM உதவியது. நடுத்தர வர்கத்திற்கு 30 வயதில் சொந்த வீடு வாங்க முடிந்தது. 80 ரூபாய் கொடுத்து சினிமா பார்க்கவும், 40 ரூபாய் மசால் தோசை சாப்பிடவும் முடிந்தது. ஏராளமான பண புழக்கத்தால் வங்கியிடம் கை இருப்பு அதிகமானது. வங்கி தாரளமாக எல்லாருக்கும் கடன் வழங்கியது. இளைஞர்கள் கையில் காசு புரள ஆரம்பித்தது . சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இந்த பொருளாதார கொள்கையும் உலகமயமாக்கலும் நடுத்தர வர்க்கத்தை மேல்தட்டு நடுத்தர வர்கமாக (upper middleclass) உசத்தியது. இந்தியாவை உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரும் நாடக மாற்றியது. ஆண்டுக்கு 8 சதவீத நிகர வளர்ச்சி விகிதம் (GDP) சாத்தியமானது. ஆனால் இந்த பொருளாதார தாரளமயமாக்கல் எந்த விதத்திலும் ஏழைக்கு உதவ வில்லை. விலைவாசி உயர்வு(inflation) கட்டுகடங்காமல் போனது. ஒரு சமயத்தில் உச்ச பட்சமாக 14 % எட்டியது (நேதேர்லண்டில் இது வெறும் 1.6% தான்). இந்தியாவின் கடைசி குடிமகன் ரொம்பவும் சிரமப்பட்டான்.

இந்தியர்களின் அயராது உழைப்பு, புத்திசாலித்தனம், குறைந்த ஊதியம் எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய ஆங்கிலம், இவை மேல்நாட்டவரை மிகவும் கவர்ந்தது. இந்த உலகமயமாக்கல் மற்றும் தாரளமயமாக்கல் அவர்களுக்கு மிகவும் உதவியது. தமது back office, callcenterகளை இந்தியா நெடுகிலும் ஆரம்பித்தார்கள். அமெரிக்காவில் firdge வேலை ஆகவில்லை என்று ஒரு அமெரிக்கன் phone செய்கிறான்..அந்த phone எடுக்கும் ஒருவன் தன்னை Brain Spencer (american name) என்று அறிமுக படுத்திக் கொண்டு அமெரிக்கா ஆங்கிலத்தில் பேசுகிறான். Fridge சரி செய்ய ஆள் அனுப்புவதாக கூறுகிறான். இவனுக்கு பதில் அளித்தது பெங்களூரில் உள்ள சுப்பிரமணி என்று அவன் அறிந்து இருக்க சாத்தியம் இல்லை. ஒரு மிக பெரிய நிறுவனத்தின் வாடிக்கை சேவை மையம் முழுதும் இந்தயாவில் இயங்கி வருகிறது. ஆனால் இதை அமெரிக்கா வாடிகயாளர்கள் அறிந்து இருக்க சாத்தியமில்லை. நம்மவர்கள் பகலில் தூங்கி இரவில், அமெரிக்கா விழித்து இருக்கும் போது விழித்து இருந்து வேலை செய்கிறார்கள். அனைவரது உண்மையான பேர்கள் மாற்றப்பட்டு அனைவருக்கும் ஆங்கில பேர்கள் சூட்டப்படுகின்றன. அமெரிக்கா ஆங்கிலம் கற்று தரப்படுகிறது. முழு வாடிக்கையாளர் சேவை மையம் இந்தியாவில் இயங்குவதால் அந்த நிறுவனத்திற்கு எக்க சக்கமாக செலவு குறைகிறது. நம்மவர்களுக்கு 5 இலக்க சம்பளம் கிடைக்கிறது.

BPO, Call centere ஒரு புறம் என்றால், மறுபுறம் IT மிக பிரமாண்டமாக வளர தொடங்கியது. IBM, Accentrue என்று அனைத்து கம்பனிகளும் இந்தியாவில் கிளைகளை திறந்தன. ஏன்..Microsoft ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் மிக பெரிய அலுவலகத்தை திறந்தது. ITkku ஏக கிராக்கி உருவானது. எந்த துறையில் பட்டம் வாங்கி இருந்தாலும் சரி அவர்கள் IT பால் இழுக்க பட்டனர். MBA, CA என்று அனைவரும் IT வசப்பட்டனர். onsite என்று சொல்லி, பலருக்கும் மேல்நாடுகளில் சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிட்டியது. பலர் அமெரிக்கா சென்று, வந்த வேலையை விட்டு விட்டு புது வேலை தேடி அங்கேயே settle ஆக ஆரம்பித்தனர். அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர தொடங்கியது.

இப்படி IT பால் இழுக்கப்பட்ட இன்னொரு ஜீவன் தான் நான்.! இந்த IT கம்பெனிகளுக்கு நாளடைவில் இருக்கின்ற தொழிலாளிகள் எல்லாம் போத வில்லை. நாடு எங்கிலும் இருந்து அதிக சம்பள ஆசை காட்டி அனுபவமுள்ள மக்களை தன் பால் இழுக்க ஆரம்பித்தார்கள். நான் வேலை செய்யும் அலுவலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இருந்தும் அவர்களுக்கு ஆள் போத வில்லை. இன்னும் இன்னும் என்று மக்களை தேடி பிடித்து சேர்க்கிறார்கள். எடுத்த பிறகு தான் அவர்களை வைத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். சென்னையை சேர்ந்த என்னை ஹைதராபாத் உள்ள projectkku அனுப்புகிறார்கள். அங்குள்ளவர்கள் என்னை புனேக்கு அனுப்புகிறார்கள்.. அங்கிருந்து என்னை Netherlands அனுப்பினார்கள் .. இங்கிருந்து என்னை spain போய் வா என்று சொல்கிறார்கள். இது சாதரணம் IT கம்பனிகளில். எல்லாம் சரி ..எனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை இவர்கள் உணர்ந்தார்களா? இங்கு மூன்று மாதத்திற்கு மேல் எதையும் திட்ட மிட முடியவில்லை. இன்று நான் இங்கு இருக்கிறேன் .. 3 மாதத்திற்கு பிறகு நான் எங்கு இருப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது மேல் அதிகாரியை கேட்டால் அவருக்கும் தெரிய வில்லை என்கிறார். கொஞ்சம் சத்தமாககேட்டால் நீ இந்தியா வந்துவிடு என்கிறார். இந்தியா என்றால் எங்கு??? இந்தியா என்ன சிறிய நாடா ?.. சரி நான் சென்னைக்கு வந்து விடுறேன், நீ சென்னையில் project கொடு என்றால் முடியாது, வேண்டுமானால் பெங்களூர் தருகிறேன் என்று பேரம் பேசுவார். சரி ஏதோ ஒன்று.. ஒரு இடத்தில் ஒட்கார்ந்து கொழந்தையை ஒரு பள்ளியில் சேர்த்து மனைவிக்கும் இங்கு மாற்றம் வங்கி வேலையை ஆரம்பித்தால், அமெரிக்காவில் ஒரு வாய்ப்பு இருக்கிறது போகிறாயா என்று ஆசை காட்டுகிறார்கள். நாமும் வெளி நட்டு மோகத்திற்கு ஆசை பட்டு பெட்டியை தூக்குகிறோம். இதில் மனைவிமார்கள் கதி தான் மிகவும் பரிதாபம். கல்யாணத்திற்கு முன்பு வரை நல்ல கம்பனிகளில் வேலை பார்த்து வருபவர்கள், ITyil வேலை செய்யும் ஒருவனை கல்யாணம் செய்து கொண்டால் ..அவ்வளவு தான்.. இங்கு இருந்து ஆரம்பிக்கறது ஆபத்து. ஊர் ஊராக பயணம் செய்யும் கணவனுக்காக வேலையை தியாகம் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ள படுகிறார்கள். அவர்களுடைய படிப்பு, அறிவு எல்லாவற்றையும் மூட்டை கட்டி விட்டு, கணவனையும், குழந்தையும் கவனித்து கொள்ள தயாராக வேண்டிய நிலைமை. இவர்கள் இந்த சமரசத்துக்கு ஒத்து கொள்ளாத பட்சத்தில், இருவரும் தனித்து வாழ வேண்டிய நிலைமைக்கு தள்ள படுகிறார்கள். இது நரகம்!. என்னுடைய நிலைமையும் இது தான் !. உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவேன் என்று மிரட்டும் அதிகாரிகள் இனிமேல் ஒரு மாறுதலுக்காக உன்னை IT கம்பனிக்கு மாற்றி விடுவேன் என்று மிரட்டலாம்.

இந்த உலகமயமாக்கலிலும் நவீன பொருளாதாரத்திலும் விற்கப்பட்ட அடிமை நான். இதை கூற எனக்கு வெக்கமோ, கூச்சமோ எதுவும் இல்லை. இது நானாக தெரிந்ததே எடுத்த முடிவு. என்னால் இங்கிருந்து பின்வாங்க முடியாது. இந்த ஆடம்பரத்திற்கு நான் பழகி விட்டேன். ஒரு காலத்தில் நானும் என் மனைவியும் சேர்ந்து 1 லட்சம் மாதம் சம்பாதித்தோம் ..இது ITyaal மட்டுமே சாத்தியமானது. என்னால் இனிமேல் எனது பெற்றோர்கள் போல் மாதம் 5000 ரூபாய்க்கு குடும்பம் நடத்த தெரியாது. தெரிந்தே போட்டு கொண்ட விலங்கு இது. இப்பொழுது புலம்பி எந்த உபயோகமும் இல்லை.

இந்த உலகமயமாக்கலிலும் இந்தியாவின் நவீன பொருளாதாரத்திலும் எனது "Permanent Address"ai தொலைத்து விட்டு நிற்கிறேன். என்னுடைய Permanent address எது என்று கேட்டால் எனக்கு அப்படி ஒன்றும் இல்லை என்பதை வெக்கத்தை விட்டு சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்குறேன். ஆனால் நான் இங்கு தனித்து விட படவில்லை . என்னுடன் லட்ச கணக்கானவர்களும் permanent address தொலைத்து விட்டு நிற்கிறார்கள் என்பதை நினைத்து ஆறுதல் கொள்கிறேன். இந்த உலகமயமாக்கலில் என்னுடைய கதி மிகவும் பரிதாபத்திற்குரியது. உலகமயமாக்கலால் பாதிக்கப்பட்டோர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் ..என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?

லேபிள்கள்: ,

திங்கள், 22 டிசம்பர், 2008

Treasure of My Life- My Daughter Shreya

July 20, 2006 - This day is the most memorable day in my Life. Normally if there is a child birth, people will usually call it as a promotion in Family Life. On this gorgeous day, I got 2 promotions not only in my family life but also in my career life. After 20 hrs of Labour pain I delivered my baby. My sweet little daughter first opens her little eyes and saw this world on this day. The same day I got my promotion in my career life as an IT Analyst. So I can say I got 2 promotions. July 30th was the auspicious “Punniyajalam” day. On this occasion lots of our relatives both Venkat and my relatives assembled in Pammal house and they all blessed my daughter and on that day we gave her the sweet name “SHREYA” which means “Auspicious”. She has got 2 more names “KIRTHIGA” and “LAKSHMI”. She is born on a Krithigai star day and hence she got the name KIRTHIGA. My parents and Venkat’s Parents presented jewels for Shreya. Venkat was very happy and every alternative weeks Venkat came from Hyderabad to see her petite kid Shreya!!

For the first 3 months, she slept the whole day in the morning and the full night she was crying. The first 3 months of her birth was a night shift for all in my mom’s house and she was crying for the whole night for all those days. From the 91st day she started sleeping in then night and in the morning she was awake. She was very chubby at that time and fond of drinking milk. One day my mom put all her jewels and she was laughing and we took nice snaps.

Before my delivery itself, I got lots of toys for Shreya from her beloved Peppi and my sweet sister Gayathri. So Shreya slowly started playing with the big fisher price toy. On the 4th month she started to turn around. It was very nice to seeing a baby turning around.
Each stage of a child is really a God’s Blessing. I believe that God will teach each and every baby at their respective months to learn new things. So did our daughter Shreya.

5th Month I came with Shreya to Adyar Home with my in-laws. Mom and dad presented a arana for shreya and blangles for Shreya. Shreya started to crawl in this house. My sister’s gift for shreya is Pram.

We bought a new flat in Velachery and in Jan 29 ’07, we celebrated house warming ceremony. Its 6th Month for Shreya. Our kid is the owner of a new flat. The same day Venkat was asked to start his Onsite procedures in Infosys. Then we shifted all the things from Adyar to Velachery and Shreya again got accustomed to this new house and started crawling in the new house. I started going to office and Shreya used to be with Patti and thatha. Rengu thata took the responsibility of giving her lunch and making her sleep in thuli. He sang lot of songs to make her a good sleep. She enjoyed the songs and started doing mischievous things. She knows 3 songs “Lali” song which vijiamma will always sing and “thuli aada” and “devi sridevi” songs from rengu thatha.

4th April ,07, we made a trip to Kodaikanal. Its 9th month for Shreya. We took many snaps and Shreya looked adorable in those photos. It was one of our unforgettable trip as Shreya fall very sick while returning from kodaikanal to Madurai. We went to Sita Perima’s house and took Shreya to a doctor and gave her medicines. She slowly recovered from that illness. Meanwhile in TCS they asked for “Experience Certainty” innovative video volunteers. Venkat shoot a video of Shreya and we presented that in TCS, though it didn’t get selected, still we got lot of good comments in YouTube. Like most of babies Shreya also trouble us lot in eating. Then slowly she started having food without our compulsion. Suddenly one day my sweet potato started to walk thathka pithuka!!!!. On one auspicious day we took our doll to mayilam temple for hair shredding. She looks awesome even without hair. “Kakaiku than kunju pon konju”.

July20th 07, we celebrated my daughter’s first birthday. I invited all my TCS friends and other friends. We prepared dishes in home itself and around 7pm, my daughter cut the cake and everybody enjoyed the dinner!!! She got lot of soft dolls. She named it as Koki, ramu, kamu, shoba,subramani etc… She started paying with all teddy’s…

7th August 07, we celebrated her ayushomam.This is as per our culture, we pierced her ears and wore her pretty tiny ear rings. She looked amazingly!!!. Slowly we started teaching her with animals and transport pictures. She is very active in learning as well as her interest towards hearing stories is splendid. She slowly started to speak. At the beginning she was telling Thatha and Appa and gradually she started to say Amma. She will call her Chitapa as Thopa and Perima as Pepi. These are her mazhalai words. Still she is using these words.

Whatever we teach her, she is good in grasping the same. She started identifying the animals, transport, colors. At her 11/2 age we came to Nederlands. She started to enjoy her world with her much-loved Appa. Chalam’s bundle of joy is Shreya. He used to play with her for hours after returning from office. Shreya’s mischief grows with her. She started to break the toys, pour the water, etc…. We found sometime hard to manage her. Since I am on a long leave, I am spending my full time with her. After coming to Nederlands, Shreya started to talk sentences. Slowly we started using English words and now she also knows some English words. She always call me as Sowmi amma(not mom or amma). Not only me, she calls every one with name + title, like Venkat appa, Subbu patti, Viji ammamma, Lachu thatha, Rengu thatha, Neeru aunty. I like this way of calling and i dont want to change this.

On April 08, My sister, Cheenu and my niece Shweta kutty came to Nederlands. We all enjoyed those 2 weeks vacation. We went to the Tulip Gardens, Madame Tussard and Efetling Amusement Park and some more places and we all enjoyed. Shweta and Shreya played together and they had a good fun.

We went to Paris, Italy, Texel Island and many places in Nederlands and Shreya enjoyed a lot.

My doll has got lot of Positive Points

She won’t cry if she falls down
She don't have any fear for dark. She goes to all the rooms and hide even if there is no light in the rooms
She loves to walk long distances. She climbed up nearly 450 steps in the Vatican City Rome in her 2 years of age.
She eats dosa, chapatti, bread, and all vegetables. No restriction on food.
But the major negative point is
Her arrogance, we are trying hard to make her to change this single point.

My daughter is a treasure, a blessing. She’s laughter, warmth, and special charm, she’s beauty, and she’s love.My daughter brings a special joy that comes from deep inside; she fills my heart with pride.

With every day that passes, she’s more special than before, through every stage, through every age, I love her even more.

No words can describe the warm memories, the pride and gratitude too, that come from having a daughter to love, and to cherish.


Long Live My Baby!!!

With Tons n Tons of Love from

Sowmi Amma & Venkat Appa

செவ்வாய், 16 டிசம்பர், 2008

கடவுளை பற்றிய எனது நிலைப்பாடு

நிற்க!. இது முழுக்க முழுக்க என்னுடைய சிந்தனை , என்னுடைய நிலைப்பாடு, அவ்வளவு தான். கண்டிப்பாக நான் இங்கு நாத்திகம் பேச போவது இல்லை. இதன் மூலம் நான் மெத்த படித்தவன் என்று கட்டி கொள்ளவோ, அதிக பிரசங்கி என்று சொல்லி கொள்ளவோ விரும்ப வில்லை. இதன் மூலம் நான் என்னுடைய கொள்கைகளை யார் மேலும் திணிக்க விரும்பவில்லை. இதை படித்து விட்டு யாரும் தமது கொள்கைகளை விட்டுவிட வேண்டாம். எனக்குள் எழும் கேள்விகளை நான் இங்கு முன் வைக்கிறேன். இதையும் மீறி உங்களை, உங்களது நம்பிக்கைகளை இது புண் படுத்தும் என்று நீங்கள் கருதினால் மேற்கொண்டு படிப்பதை தவிர்க்கவும்.

கடவுள் என்பவர் யார் ? உலகம் முழுதும் ஏராளமான மதங்கள், ஏராளமான கடவுள்கள் இருக்கிறார்கள். முக்குக்கு முக்கு கோவில்கள் இருக்கின்றன. இது தவிர நாம் பல கடவுள் படங்களை சட்டத்தில் அடித்து frame செய்து மாட்டி தினமும் கும்புடுகிறோம், பூஜை செய்கிறோம். மனமுருகி வேண்டுகிறோம். இந்த பிரார்த்தனை பலித்தால் உனக்கு வெள்ளி கவசம் போடுகிறேன் என்று வியாபாரம் பேசுகிறோம். பக்கம் பக்கமாக சமஸ்க்ருத ஸ்லோகங்களை உறி அடித்து அதன் அர்த்தம் கூட புரியாமல் அதை சொல்லி /பாடி கொண்டே சமையல் பண்ணுகிறோம். சிலர் தீ மிதிக்கிறார்கள், வாயில் அலகு குத்தி கொள்கிறார்கள். கோவில்களில் மூன்று ரூபாய் அர்ச்சனை சீட்டு வங்கி குடும்பத்தில் உள்ள அத்தனை பேர் பேரிலும் அர்ச்சனை செய்கிறோம். உடம்பை வருத்திக்கொண்டு அங்க பிரதக்ஷணம் செய்கிறோம். இவ்வளவு சட்டம் பேசும் நானும் மந்த்ராலயத்தில் அடி நமஸ்காரம் செய்து இருக்கிறேன். எதற்காக நாம் இப்படி எல்லாம் செய்கிறோம்? உண்மையில் கடவுள் இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்து நமக்கு நல்லது செய்கிறாரா?. அப்படி செய்கிறார் என்றால் கோடி கணக்கான மனிதர்கள் பிரார்த்தனை செய்கிறார்களே, அவர்கள் எல்லாருக்கும் அவர்கள் கேட்டது கிடைக்கிறதா? நீங்கள் இது வரை மனமுறிகி வேண்டியது எல்லாம் நடந்து இருக்கிறதா? அப்படி நடந்து இருந்தால் இது எல்லாம் கடவுள் ஒருவனால் மட்டுமே நடந்தது என்று நம்புகின்றீர்களா? சந்தனம் , தேன், எண்ணை, நெய் , பஞ்சாமிர்தம் என்று கொட்டுகிறார்களே.. இதனால் அவர் மனம் குளிர்ந்து நமக்கு நல்லது செய்வாரா? பழனி ஆண்டி சிலையில் ஏதோ நவபாழனம் இருக்கிறது என்பதற்காக அங்க நோண்டி, இங்க நோண்டி பழனி ஆண்டி குண்டியை நோண்டினார்களே.. அவர்களை கடவுள் தண்டிக்கும் என்று நம்புகின்றீர்களா? ஒரு டஜன் சாமி படங்களுக்கு ஒரு tumler பாலை நெய்வேத்யம் பண்ணி அதையும் நாம் குடிக்கிறோமே ..அது எதற்காக..? உங்களுடைய பகுத்தறிவிற்கு இது எல்லாம் உண்மை என்று தோன்றுகிறதா..? என்னடா இவன் நாத்திகம் பேசமாட்டேன் என்று சொல்லி விட்டு நாத்திகம் பேசுகின்றான் என்று எண்ண வேண்டாம். இந்த கேள்விகள் எல்லாம் இதற்க்கு முன்பே பல நாத்திகர்கள் கேட்டு விட்டார்கள். இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்று முடிவுக்கு வந்து விடுவது சரியா ?

எனது கிராமத்தில் ஐயப்பன் பூஜையின் போது சிலருக்கு அருள் வந்து ஆடுவதை பார்த்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவர்களை கட்டு படுத்துவது மிகவும் கடினம். எனது தந்தைக்கு கூட ஒரு சில தடவை இந்த அருள் வந்து இருக்கிறது. எத்தனையோ இயேசு அழைக்கிறார் கூட்டங்களில் ஏராளமானோர் தன்வசம் இழந்து இருக்கிறார்கள். அவர்களிடம் இயேசு குடி கொண்டு இருக்கிறாரா? கண்டிப்பாக இல்லை. இதற்க்கு 'உணர்ச்சி வயபடுதல்' என்று சொல்லலாம். அயப்பன் பூஜையின் போது எல்லாரும் ஒன்றாக சரணம் கூப்பிடும் போது வேறு சிந்தனையே இல்லாமல் நாமும் அதில் மூழ்கி விடுகிறோம். அப்போது ஒருவர் உங்களுக்கு பின்னிருந்து சத்தமாக 'சாமியே ' என்று கூப்பிடும் போது நீங்கள் நிலை தடுமாறி தன் வசம இழந்து உங்கள் கட்டு பாட்டில் இல்லாமல் போகிறீர்கள்..இது தான் இயேசு அழைக்கிராரிலும் நடக்கிறது.. தியேட்டரில் மாரியம்மா பாட்டின் போதும் நடக்கிறது.

நீங்கள் ....
1. நமக்கு நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் நாம் செய்யும் நல்லது கெட்டதுகளை பொறுத்தே இருக்கிறது என்று நம்புகின்றீர்களா?. நாம் மனதால் நல்லது நினைத்து நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதா ?
2. நம்முடைய பழக்க வழக்கங்கள், உணவுமுறை, பாரம்பரியம் போன்றவற்றை பொறுத்தே நமக்கு நோய்கள் வருகின்றன, அதை மருந்து, மாத்திரை, மருத்துவரால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றும் ஒப்புகொள்கிறீர்களா?
3. நம்முடைய சாதுர்யம் போதன்மை, உழைப்பு, முயற்சி இல்லாமை, சோம்பேறித்தனம் தான் நம்முடைய கழ்டங்களுக்கு காரணம் என்பதை ஒப்புகொள்கிறீர்களா?
4. நாம் எடுக்கும் பல முடிவுகளை (நல்லதோ , கெட்டதோ) பொறுத்து நம்முடைய எதிர்காலம் இருக்கும் என்பது சரியா ?
5. எதிர்பாராமல் நடக்கும் விபத்து, இயற்கை சீற்றத்தினால் உண்டாகும் அழிவு போன்றவை எதுவும் நம்மமுடைய கட்டுபாட்டில் இல்லை என்பதையும் ஒப்புகொள்கிறீர்களா?

மேற்சொன்னவற்றை நாம் ஒத்துக்கொள்ளாது போகும் போது, நமக்கு கடவுள் துணை தேவை படுகிறது. ராகு காலத்தில் சென்றதினால் தான் இந்த காரியம் நடக்க வில்லை என்று நம்ப தோன்றுகிறது. மனிதனுக்கு ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும். மனிதனையும் மீறி அவனுடைய கட்டு பாட்டில் இல்லாமல் பல காரியங்கள் நடக்கின்றன. திடீரென்று நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நோய் வாய் படுகிறார்கள். சிலர் வேலை இழக்கிறார்கள்..இந்த எதிர் பாரத, அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாது சிலது நடக்கும் போது அவர்கள் மிகவும் ஆடி போய் விடுகிறார்கள். இத்தனை பெரிய இழப்பில் இருந்து எப்படி எழுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, அவர்கள் ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்து அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள். இந்த நம்பிக்கை தான் இங்கு கடவுள். நமக்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்று அவர்கள் 'நம்பும்' போது ஒரு தைரியம் வருகிறது. கடவுள் சந்நிதானத்தில் போய் நின்று மனமுறிகி வேண்டி வெளி வரும் போது ஒரு தெளிவு அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த தெளிவுடன் அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். நல்லது நடக்கும் போது இது என்னுடைய பிரார்த்தனையால் தான் நடந்தது என்று நம்புகிறார்கள். இல்லாத போது எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று சமாதானம் செய்து கொள்கிறார்கள். இந்த நம்பிக்கை மிகவும் தேவை. தன்னால் முயன்றது அத்தனையும் முயற்சித்து எதுவும் நடக்காமல் போகும் போது பாரத்தை கடவுள் மேல் இறக்கி வைக்கிறார்கள். மிகுந்த சோதனையில் இருக்கும் ஒருவனிடம் போய் நீ ஒரு நடை வேளங்கண்ணி சென்று பிரார்த்தனை செய்து வா பலிக்கும் என்றால் மிகுந்த நம்பிக்கையுடன் அவன் பிரார்த்தனைக்கு தயாராகிறான். இந்த நம்பிக்கை தான் ஒருவனை வாழ வைக்கிறது என்றால் கடவுள் இருக்கிறார் என்று நம்பி விட்டு தான் போவோமே.!

மிகப்பெரும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவன் தமக்கு அளித்து வரும் சிகிச்சைகளில் நம்பிக்கை இல்லாமல் தான் மிக சீக்கிரத்தில் இறந்து போக போவதாக நம்புகிறான். அவனுடைய பார்வையில் ஒரு money plant செடி தெரிகறது.அதில் வெறும் மூன்றே இலைகள் தான் இருக்கின்றன. அதுவும் தன்னை போல் நோய் முற்றி சாகும் தறுவாயில் உள்ளது என்று நம்புகிறான். அதில் உள்ள இலைகள் தான் தம்முடைய உயிர் என்றும்.. ஒவ்வொரு இலையாக விழ விழ தம்முடைய உயிரும் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது என்று கற்பனை செய்து கொண்டான்.அடுத்த நாள் அந்த செடியில் உள்ள ஒரு இல்லை உதிர்ந்து விடுகிறது... இவனுடய உடல் நிலையும் மோசமானது.. அடுத்த நாள் இரண்டாவது இலை உதிர்ந்தது. இவனது உடல் நிலை மிக மோசமானது.. இன்னும் ஒரே ஒரு இலை தான் அந்த செடியில் இருந்தது..அது விழும் போது தம்முடய உயிர் போய் விடும் என்று மிகவும் நம்பினான். அடுத்த நாள் விழித்து பார்த்த போது அந்த இலை உதிர்ந்து விழாமல் இருந்தது..இவனுக்கு நம்பிக்கை வந்தது.. அடுத்த நாளுமிந்த இலை விழ வில்லை.. இவனுக்கு புத்துணர்ச்சி வந்தது.. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற தொடங்கியது .. அடுத்த ஒரு மாதத்தில் அந்த இலையும் விழ வில்லை, இவனும் முழுதுமாக குணமாகி விட்டான். உண்மையில் இவனுடைய நம்பிக்கையை அறிந்து கொண்ட டாக்டர், அந்த செடியில் ஒரு பிளாஸ்டிக் இலையை வைத்து அது விழாது போல் பார்த்துக்கொண்டார். மருந்திற்கும் மேலாக இவனுடைய நம்பிக்கை தான் இவனை காப்பாற்றியது.. இங்கு இவன் இலை மேல் வைத்த நம்பிக்கையை நம்மில் பலர் கடவுள் மேல் வைக்கிறோம். இந்த நம்பிக்கை ஒரு உயிரை காபற்றுமனால் அந்த நம்பிக்கையை நாம் எதில் மேல் வைத்தால் என்ன ?

ஒரு முறை அயப்பன் கோவில் செல்ல மாலை போட்ட எனது தந்தை கோவில் பயணத்திற்கு பணம் போத வில்லை என்று வருத்தப்பட்டார். அயப்பனை நம்பி மாலை போட்டு இருக்கிறேன், அவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பி அன்றாட வேலைகளில் இறங்கினார். எதிர்பாராமல் ஒரு வீட்டிற்கு wiring செய்யும் வேலை வந்தது. அந்த ஐயப்பன் தான் இந்த வேலையே கொடுத்து அதன் மூலம் கோவில் பயணத்திற்கு பணத்தை ஏற்பாடு செய்து இருக்கிறார் என்று நம்பினார். இந்த நம்பிக்கை ஒருவருக்கு மிகவும் அவசியம். அவரிடம் சென்று கடவுள் மறுப்பு கொள்கையும் பகுத்தறிவும் பேச நான் விரும்ப வில்லை. அவரிடம் கடவுள் நம்பிக்கை பொய் என்று சொன்னால் உடனடியாக நான் வேறு ஏதாவது ஒன்றின் மேல் அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியாக வேண்டும். அந்த வேறு ஒன்று எது என்று எனக்கு தெரியதா பட்சத்தில் நான் வாயை மூடிக் கொள்ளவே விரும்புகின்றேன்.

எல்லாம் சரி.Matterukku வருவோம். கடவுளை பற்றிய எனது நிலைப்பாடு என்ன?. எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதனிடம் மிகவும் பற்று கொண்டவர். மெத்த படித்தவர். பகுத்தறிவு பேசிய பாரதியாரும் பராசக்தியை கொண்டாடினார். இன்னும் ஏராளமான சான்றோர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்து இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது என்னால் எப்படி கடவுள் இல்லை என்று சொல்ல முடியும்.? ஆனால் என்னுடைய கடவுள் நம்பிக்கை பகுத்தறிவுக்கு உட்பட்டது. கண்டிப்பாக உடல் நிலை சரி இல்லையென்று மசூதி முன் நின்று தொழுகை முடித்து வருபவரிடம் மூஞ்சியில் ஊத சொல்ல மாட்டேன். மூன்று ரூபாய் அர்ச்சனையில் எனது குடும்பத்து பாவம் முழுதும் தீர்ந்து போகும் என்று நம்ப மாட்டேன். ராகு காலத்தில் சென்றால் ஆபத்து என்று சொல்பவரிடம் அது உட்டாலக்கடி என்று சொல்லுவேன். உடல் வலிக்க பிரார்த்தனை செய்வது, பட்டினி கிடந்து கடவுளிடம் வேண்டுவது, கழ்டம் வரும் பொது கடவுளை திட்டுவது , உனக்கு தங்க அங்கி போடுகிறேன் என்று வேண்டி கொள்வது, லிட்டர் லிட்டராக சாமிக்கு அபிஷேகம் செய்வது, கடவுள் முன்பு கோழி, ஆடு, மாடு வெட்டுவது போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. இரண்டாயிரம் ரூபாயை விசேஷ பூஜைக்கு கொடுப்பதற்கு பதிலாக ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு செலவிடுவேன். அன்பே சிவம், ஏழையின் சிரிப்பில் கடவுளை காணலாம் எனபதை உறுதியாக நம்புகின்றேன்.

கடவுளை பற்றிய எனது நிலைபாட்டை நான் தெளிவு படுத்தி விட்டேன். உங்களுடைய நிலைப்பாடு என்ன ? எல்லாரும் சேர்ந்து 2009 நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் கூட்டு பிரார்த்தனை செய்யலாமா ?

லேபிள்கள்: ,

வியாழன், 11 டிசம்பர், 2008

ஆரஞ்சு


ஆரஞ்சு என்று சொன்னவுடன் உங்களுக்கு எதுங்க ஞாபகத்துக்கு வருது ? ஆரஞ்சு பழம் தானே ? ஒரு வருடத்துக்கு முன்னால் என்னிடம் இந்த கேள்வியை கேட்டு இருந்தால் நானும் இதை தான் சொல்லி இருப்பேன். ஆனால் இப்பொழுது என்னுடைய பதில் நெதெர்லாந்து! இதற்கும் ஆரஞ்சு க்கும் என்ன சம்பதம்னு கேக்கறீங்களா ? நெதெர்லாந்து உடைய கலர் ஆரஞ்சுங்க

கிட்ட தட்ட கேரளா சைஸ் தான் இருக்கும் நெதெர்லாந்து. பொதுவாக இந்த நாட்டை ஹாலந்து என்று அழைக்கிறார்கள். இது தவறு. தெற்கு மற்றும் வடக்கு ஹாலந்து இங்கு உள்ள இரெண்டு மாகாணங்கள் அவ்வளவு தான். இதை வைத்து ஒட்டு மொத்தமாக நேதேர்லாந்தை ஹாலந்து என்று அழைப்பது பிழை. இங்கு மக்கள் பேசும் மொழி டச்சு. இங்கு வாழும் மக்களை டச்சு என்று அழைகிறார்கள். கேப்டன் விஜய காந்த் இந்த ஊரில் பிறந்து இருந்தால் "நான் வேணும்னா கூலி காரனா இருக்கலாம் ஆனால் நான் ஒரு டச்சு காரன்டா " என்று கண்ணு சிவக்க சிவக்க வசனம் பேசுவார்.

இங்கு பூக்கும் துலிப் மலர்கள், விண்ட்மில் , மர ஷூ, சீஸ் எல்லாம் ரொம்ப பிரபலம். இது எல்லாவற்றையும் விட எனக்கு இங்கு ரொம்ப பிடித்தது இங்கு வாழும் மக்கள். கேப்டன் பாணியில் சொல்லவேண்டுமானால் டச்சு காரர்கள். டச்சு காரர்கள் மிகவும் பொறுமை சாலிகள். ஒரு வேலையே கொடுத்துவிட்டு அதை முடித்து கொடுப்பதற்காக காத்திருக்கும் பொறுமை இவர்களிடம் இருக்கிறது. நடுரோட்டில் நீங்கள் நடந்து போனால் கூட காரின் வேகத்தை குறைத்து புன்சிரிப்புடன் உங்களை ஓரமாக செல்லும் படி கை காட்டும் பெருந்தன்மை அவர்களிடம் இருக்கிறது. உங்களை பார்க்கும் போது மலர்ந்த முகத்துடன் வணக்கம் சொல்லும் பாந்தம் இருக்கிறது. வீடுகளை மிக துப்புரவாக வைத்துக்கொள்ளும் நேர்த்தி இருக்கிறது. நள்ளிரவு நேரத்திலும் கூட சிக்னலில் சிகப்பு விளைக்கை பார்த்தவுடன் வண்டியை நிறுத்தும் பொறுப்புணர்ச்சி இருக்கிறது. இங்கு மிகவும் தடினமான பெண்களை பார்ப்பது அரிது. அனைவரும் சிக் என்று இருப்பார்கள். கத்தி பேசுவது, கோபம் கொள்வது, உணர்ச்சி வசப்படுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது என்று எதுவும் கிடையாது. இத்தகைய குணங்களுக்க்காகவே தாரளமாக நாம் சொல்லலாம் "அட்றா சக்கை அட்றா சக்கை".
இங்கு எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விழயம் சைக்கிள். இங்கு சைக்கிள் செல்வதற்காக தனி ரோடு போட்டு உள்ளார்கள். சைக்கிள் தான் இவர்களது பிராதன வாகனம். அறுபது வயது பாட்டி கூட சைக்கிள் மிதிக்கிறாள். இது இந்தியாவில் சாத்தியமா என்று தெரிய வில்லை. தனி ரோடு இருந்தால் கூட வேளச்சேரி முதல் அம்பத்தூர் வரை நாற்பது டிகிரீ வெயிலில் யாராவது சைக்கிள் மிதிப்பார்களா என்பது சந்தேகம் தான். அப்புறம் இங்குள்ள ரயில். என்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது இங்குள்ள ரயில்கள்.

Amsterdamil உள்ள சிகப்பு விளக்கு பகுதி மிகவும் பிரசித்தி பெற்றது. சிகப்பு விளக்கு என்றவுடன் நீங்கள் மும்பை சிகப்பு விளக்கு பகுதியையோ அல்லது மகாநதி படத்தில் காண்பிக்கப்படும் கொல்கத்தா சிகப்பு விளக்கு பகுதியை போல் அழுக்காகவும் , அசிங்கமாகவும் ஏராளமான ப்ரோகேர்களுடனும் இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இந்த சிகப்பு விளக்கு பகுதியை ஒரு மிக பெரிய சுற்றுலா தலமாக வளர்த்துள்ளர்கள். மிகவும் பாதுகாப்பான இடம். வீதியின் இரண்டு பக்கங்களிலும் கண்ணாடி கதவுக்கு பின்னால் நின்று பிகினியில் பெண்கள் உங்களை அழைபார்கள். கருப்பு, சிகப்பு, மாநிறம், சப்பை மூக்கு, குள்ளம், ஒயரம் என்று எல்லா விதங்களிலும் பெண்கள் இங்கு கிடைப்பார்கள். வீதியில் நடந்து கொண்டே இரண்டு பக்கங்களிலும் காத்திருக்கும் பெண்களை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒரு நடை போய் வரலாம். ஐம்பது euro க்கு உங்களால் ஈடுகொடுக்க முடிந்தால் சொர்கத்தை காட்டுவார்கள். முப்பது euro கொடுத்தால் லைவ் ஷோ பார்த்து வரலாம். செக்ஸ் சம்பத்தப்பட்ட அத்தனை கருவிகளையும் (!?) இங்கு கடை விரித்து பரப்பி இருப்பார்கள். நானும் என் மச்சானும் ஒரு முறை இங்கு ஒரு உலா 'சென்று' வந்தோம். நாக்கை தொங்க போட்டுக்கொண்டு ஜொள்ளு விட்டோமே தவிர பக்கத்தில் போய் ரேட் விசாரிக்க கூட தைரியம் போத வில்லை. நீங்கள் இந்த சமாச்சாரத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவரானால் ஒரு நடை இங்கு போய் வரலாம்.


அறுபது லக்ஷம் துலிப் மலர்களை நீங்கள் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமா ?இங்கு மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் இங்கு பூக்கும் துலிப் மலர்கள் ரொம்ப அருமை. பல வண்ணங்களில் லக்ஷ கணக்கான துலிப் மலர்களை ஒரே இடத்தில் பார்ப்பதற்காகவே நீங்கள் இங்கு ஒரு முறை வந்து போகலாம்.
இந்த நாடு 350 வருடங்களுக்கு மேலாக ஒரு சுதந்திர நாடு. மக்கள் தொகை ரொம்ப குறைவு. இங்கு லஞ்சம், ஊழல் இல்லை. மேற் சொன்ன அறிய குணங்கள் இங்குள்ள மக்களுக்கு இருக்கிறது. இன்னொரு நாட்டை நம்பி பொழப்பை ஓட்ட வேண்டிய நிலைமை இவர்களுக்கு இல்லை. என்னுடைய மனைவிக்கு வேலை இல்லை என்பதால் இந்த அரசாங்கம் மாதம் 200 euro தருகிறது. மின் வெட்டு இல்லை. மின் வெட்டின் போது காதில் வந்து பாட்டு படும் கொசு இங்கில்லை. மிக சுத்தமான தண்ணீர் இங்கு கிடைக்கிறது. குண்டும் குழியுமான சாலை இல்லை. திருட்டு பயம் இல்லை. வெயில் இல்லை. வியர்வை இல்லை. என் கக்கத்தருகில் வாசனை இல்லை.
ஐந்து வருடம் இங்கிருந்தால் கூப்பிட்டு டச்சு பாஸ்போர்ட் கொடுத்து விடுவார்களாம். என்ன ஒரு டச்சு பாஸ்போர்ட் வங்கிடலமா ? எனக்கும் என் பெண்ணுக்கும் ஆரஞ்சு நா ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு ?

லேபிள்கள்: ,

புதன், 10 டிசம்பர், 2008

2008 - ஒரு டைரி குறிப்பு

2008 எப்படிங்க இருந்தது ? இந்த உலகத்தபொறுத்த வரை இது ஒரு மோசமான வருடம். மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இந்த உலகம் சந்தித்தது. "Recession" என்ற வாக்கியம் மிக பரவலாக பேசப்பட்டது. அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த "Recession" chain reaction போல உலகம் முழுதும் பத்தி கொண்டது. மிகப்பெரும் ஜாம்பவான்கள் எல்லாரும் மஞ்சா கடுதாசி கொடுத்தார்கள். கொத்து கொத்தாக மக்கள் வேலை இழந்தார்கள். 2nd world war அப்புறம் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெறுக்கடி இது என்று உலகம் ஒத்துக்கொண்டது. இதில் இருந்து மீண்டு வர 1 மாதம், 1 வருடம், 2 வருடம் ஆகும் என்று பலரும் பலவிதமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்தார்கள். விலை வாசி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

2008 எப்படிங்க இருந்தது ? இந்தியாவை பொறுத்த வரையுலும் இது ஒரு மோசமான வருடம் தான். Recession பயம் இந்தியாவையும் பத்தி கொண்டது. 2007ல் சக்கை போடு போட்ட பங்கு வர்த்தகம் 2008ல் மட்டையாக படுத்துக்கொண்டது. அமெரிக்கா, ஐரோப்பா வை நம்பி இருக்கும் IT கம்பனிகள், call centre, BPO அனைவரையும் கவலை பற்றி கொண்டது. அப்ஹிநவ் ஒலிம்பிக் இல் தங்கம் சுட்டார். அரசாங்கம் அவருக்கு மூன்று கோடி ரூபாய் சன்மானம் தந்து கௌரவித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மும்பை தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆளானது.3 நாள்களுக்கும் மேலாக மும்பை தீவிரவாதிகள் வசம் இருந்தது. CNN மற்றும் BBC க்கு உலகில் வேறு news இல்லாதது போல் 24 மணி நேரமும் மும்பையை உலகிற்கு காட்டினார்கள். மும்பை வாசிகள் மெழுகு வர்த்தி ஏற்றினார்கள். சிலர் பஸ் மேல் கல் எறிந்து அரசாங்கம் மேல் தமக்கு இருக்கும் கோபத்தை வெளிபடுத்தினார்கள். அரசாங்கம் வழக்கம் போல் பாகிஸ்தான் மேல் பழி சுமத்தியது. தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு மடிந்த சிப்பாய்களுக்கு மூன்று லட்சம் கருணை தொகையை அறிவித்தது. ஒலிம்பிக்கில் தங்கம் சுட்டவருக்கு மூன்று கோடி, தீவிரவாதியை சுட்டு மடிந்தவருக்கு வெறும் மூன்று லக்ஷம் தானா என்ற கேள்வி எழுந்து அடங்கியது.

2008 எப்படிங்க இருந்தது ? தமிழ் நாட்டை பொறுத்த வரை இது இன்னும் ஒரு வருடம் அவ்வளவு தான். கருணாநிதிக்கு ஒரு வயது அதிகம் ஆனது. மின்வெட்டு காரணமாக சென்னை வியர்த்து வழிந்தது. வழக்கம் போல அண்ணா தி மு க சட்ட சபையில் வெளி நடப்பு செய்தார்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி திட்டி கொண்டார்கள். ஐந்து டஜன் படங்கள் வெளி வந்து வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டது. விஜய், அஜித், சிம்பு, சொம்பு எல்லாரும் பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி ஜல்லியடிதார்கள். ஆஸ்கார் ரவிச்சந்திரன் புண்ணியத்தில் கமல்ஹாசன்10 வேடங்களில் தசாவதாரத்தில் தோற்றம் அளித்து புகழை தேடி தேடி கொண்டார். படம் படுத்துக்கொண்டது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் கதி தெரிய வில்லை. விடுதலை புலிகளுக்கு ஆதரவாக நடிகர்கள் சாலையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். உணர்ச்சி வசப்பட்டு பேசி சிலர் சிறைக்கு சென்றார்கள். உஸ்மான் சாலையில் கூட்டம் நெருக்கி தள்ளியது. போத்தீஸ், சென்னை சில்க்ஸ் என்று மூச்சு முட்ட ஷாப்பிங் பண்ணிவிட்டு சரவணா பவனில் சப்பு கொட்டினார்கள். எல்லாரும் அதிகமாக உணர்ச்சி வசபட்டர்கள், கொந்தளித்தார்கள். அளவுக்கு அதிகமாக புளிய் , காரம், உப்பு சேர்த்து முட்ட முட்ட சாப்பிட்டார்கள். மழை காலத்தில் சென்னை வாசிகள் படகில் சவாரி செய்தார்கள். டிசம்பர் சபா காண்டீனில் கூட்டம் வழிந்தது, இன்னும் ஏராளமான இளைஞகர்கள் சென்னை நோக்கி வேலை தேடி வந்தார்கள், சென்னை சென்கல்பட்டையும் தாண்டி விரிந்து கொண்டு இருக்கிறது. வடிவேல், விஜயகாந்த் சண்டையை தின தந்தி முக்கிய செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிட்டு தமிழ் நாட்டுக்கு சொன்னது. எனது அருமை மதிபிற்குரிய எழுத்தாளர் சுஜாதா காலமானார். இளைஞர்கள் சொட்டை தலையுடன் 2nd ஷோ படம் பார்த்தார்கள். கோலங்கள் இந்த வருடமும் முடியவில்லை. மெகா சீரியலின் ஆதிக்கம் இந்த வருடமும் தொடர்ந்தது .

2008 எப்படிங்க இருந்தது ? என் மாமனாரை பொறுத்த வரை மிக மோசமான வருடம் இது. ரெண்டு பொண்ணுங்களும் foreign ல. 2007 வரை ஒரு பொண்ணு தான் foreign ல இருந்தா. தனிமை ஒரு பக்கம் வாட்ட வாடகை காரன் ரெண்டு கண்ணிலும் விரலை விட்டு ஆட்டிட்டான். இனிமேல் அவர் நான் போலீஸ் ஸ்டேஷன் வாச படிய கூட மிதிச்சது இல்லன்னு சொல்லிக்க முடியாது. ஏக்க சக்க செலவு வேறு . லஞ்சம் இன்றி ஓரணுவும் அசையாது என்பதை 2008 அவருக்கு புரிய வைத்தது. இது எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டில் திருட்டு. சுவாமி னு ஒன்னு இருக்கானு அவரையே கேள்வி கேக்க வச்ச மிக மோசமான வருடம் இது.

2008 எப்படிங்க இருந்தது? என்ன பொறுத்த வரையில் சூப்பர் வருடம் இதுங்கோ. பின்ன நானும் என் மனைவியும் சேர்ந்து இருக்கற பாக்கியம் 2008 la தான் கிடைச்சது. அதுவும் foreign countryla இருக்கிற opportunity. ஸ்ரேயா (என் மகள்) வளர்வதை பக்கத்துல இருந்து பாக்கற opportunity கிடைச்சது. கை நிறைய காசு புரண்டது. பாரிஸ், இத்தாலி னு டூர் போக முடிஞ்சது. annivessarykku Island போனோம்(anga poi vegitarian kidaikkama patni kidandadhu thani story). வெள்ளி கிழமையான பெப்சி officela இருந்து free சிப்ஸ் எடுத்துண்டு வர முடிஞ்சது. வாரம் ஒரு hollywood movie download பண்ணி பாக்க முடிஞ்சது. Tom Hanks ,Samuel Jakson என்று பல நடிகர்கள் பரிச்சியம் ஆனார்கள். கலர் கலரா போட்டோ எடுத்து orkutla போட்டுக்க முடிஞ்சது. உலகில் மிக பிரசித்தி பெற்ற தேவாலயங்களுக்கு எல்லாம் போயிட்டு வந்தோம். எவ்வளவு தான் சந்தோஷமா இருந்தாலும் தனிமை தெரிஞ்சது. உறவுகள் தூரமா இருக்கற வலி புரிஞ்சது. ஷேர் மார்கெட்ல நெறைய பணம் போனது. எங்க ரெண்டு பேருக்கும் அம்மை வந்து கழ்டபட்டோம். வாரா வாரம் ஆனந்த விகடன் படிக்க முடியாமல் போனது. இப்படி சில இழப்புகள் இருந்தாலும் 2008 எனக்கு சூப்பர் ங்கோ!. உங்களுக்கு எப்படி ?

லேபிள்கள்: ,

செவ்வாய், 9 டிசம்பர், 2008

எங்களுடைய இத்தாலி பயணம்

Historyla Italya பத்தி படிக்கும் போது எல்லாம் நான் அங்க போவேன்னு நினச்சு கூட பார்த்தது கிடையாது.. ஆனால் அந்த chance கிடச்சுது. Italy போகறதுக்கு 2 months முன்னாடி இருந்தே plan பண்ண ஆரம்பிச்சோம் . Rome, Florence, Pisa, Venice nu Italyla இருக்கற முக்கியமான place எல்லாத்தையும் 6 daysla cover பண்ண plan பண்ணினோம். Rome, Florence, Venice moonume ஒரே straight rootla அமைந்தது கொஞ்சம் வசதியா இருந்தது. 22nd - 29th Nov 2008 நாங்க italy போனோம் .

1st Day Rome - Hopon Hopoff bus romba vasadhiya irundhadhu. Pantheon, Pizza Venizia, Colosseum, Roman forum, Spanish steps, Trivi fountain ellam first day cover panninom. Colosseumoda pramandam adhu oru seven wondersnu ketta podho illana adha pathi pala per solli ketta podha enakku theriyala.. Ana nerla pakkum podhu romba pramandama irundhadhu. 2000 varuzhathukku munnadi adimigala sanda poda vachu ava sagaradha pakkarathukkagave kattina oru miga periya stadium thaan indha colosseum.

2nd Day Rome - Vatican city & Vatican museum. Vatican city worldlaye romba chinna country. Motham 800 citizins thaan and pope thaan head for vatican city(country). St.Peters Basilica thaan main attraction indha vatican citykku. Ulaga christianityoda centrela naanga nikkaromnu ninaikkum podhe romba periumaya irundhadhu. St.Peters basilicavoda domela irundhu vatican cityoda view romba azhagu. 440 steps eri poganum andha domekku. Nanum sowmyavum era kazhtapattundu irukkum podhu shreya romba easya avvalavu padikattum eritta. Vatican museum innoru big attraction. Michealangelo and Raphel ivaloda paintings, art work neriya irukku. Neriya paintings irukku. Ana enakku adha rasikkara alavu knowledge illa, porumayum illa.. adhunala ellam jaragandi, jaragandi thaan.. Sistain chappel inside the vatican city romba super. Adhoda ceilingla michealangelovada works master piece!. Photo edukka kooadhunu stricta sollitanga.

3rda Day Florence - Small city with very rich in art work. Michealangelovada birth place idhu. Michealangelos 'DAVID' inga thaan irukku. St.Marias Duomo is yet another attraction in florence. Ponte Vacchio bridge is a very old bridge and a famous bridge in florence. 2nd worldwarla thapicha ore bridge idhu thaan. Indha bridge sidela thaan neriya jewels shop.

4tdh Day Pisa - Pisa sayndha kopuram pathi siencela padichirukken. Adha pappennu kanavula kooda naan ninachadhu kidayadhu. Romba azhaga irundhadhu Pisa leaning tower.

5th & 6th Day - Venice - The worlds best romantic place is venice. Railway stationla irundhu velila vandha fulla thanni thaan. Roadskku padhila thanni, buskku padhila water boat.. evvalvu nalla irukkumla. Ella idathukkum either by walk or by water boatla thaan poganum. Grand canel romba Granda irundhadhu.

We really enjoyed our trip to italy and we recommend you also to have a visit to italy.

Venkatachalam & Sowmya
30-11-2008