வெள்ளி, 10 ஏப்ரல், 2009

என்னுடைய முதல் அயல் நாட்டு பயணம்

அந்த நாளும் வந்தது.! வெங்கட்டை நெதர்லாந்துக்கு அனுப்பலாம் என்று கம்பெனியில் முடிவாகியது. எனது மனைவி மற்றும் பெற்றோர்களிடம் இதை மிகவும் அடக்கி வாச்கிக்கும் படி கேட்டு கொண்டேன் . ஏன் என்றால் இதற்க்கு முன்பு இரண்டு மூன்று தடவை இது போல அயல் நாடு செல்ல ஏற்பாடாகி பிறகு சில பல காரணங்களால் ரத்தாகி விட்டது. என்னை பார்த்த ஒரு மாமி
"நீ ஆஸ்திரேலியா போறேன்னு சொன்னியே போன வருழம்.. இன்னும் போகலையா இல்ல போயிட்டு வந்திட்டியா ?" என்று கேட்டாள்.
"இல்ல மாமி .. நான் போகல.. நேரம் கூடி வரல போல இருக்கு"
"நீ என்கிட்டே சொன்ன நேரத்துல நடக்க ஆரம்பித்து இருந்தா கூட நீ இந்த நேரம் ஆஸ்திரேலியா போய் இருக்கலாமேடா" என்று நக்கலாக சிரித்தாள்.

நம்மில் பலருக்கு வாய் ரொம்ப அதிகம். பிறருடய தோல்வி அவர்களுக்கு மிகவும் நக்கலாகி விடுகிறது.. அசை போட வசதியாக இருக்கிறது .. அதனால் தான் இந்த முறை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டேன் .. இல்லையென்றால் அடுத்த வருடம் அதே மாமி "ஏன் நீ நேதேர்லண்ட்ஸ் க்கு நடக்கலையா " என்று கேட்க கூடும்.

நெதெர்லாந்து விசா வாங்க முக்கியமாக பிறப்பு சான்றிதழ் தேவை. அட டா .. நமக்கு தான் அப்படி ஒன்னு இல்லவே இல்லியே என்று பிறகு தான் தோன்றியது .. உடனடியாக எனது அம்மா எனது மாமாவை கூப்பிட்டு .. "கிச்சா.. என் பிள்ளையாண்டன் நெதெர்லாந்து போக ஏற்பாடு பண்ணிண்டு இருக்கான் .. நீ தான் எப்படியாவது இவனுக்கு birth certificate வாங்கி கொடுக்கணும் .. நீ தான் கல்லிடைல பெரிய (தலயில் ஐஸ் ) ஆள் ஆச்சே.. ஏற்பாடு பண்ணி கொடுடா " என்றாள்.
"பண்ணி புடுவோம் .. பஞ்சாயத்து ஆபீஸ்ல இருக்கற அதன பயகளும் நம்ம பயக்க தான் .. நீ birth certificate கிடைச்சு ஆச்சுன்னு நினைச்சுக்கோ.." என்று வழக்கம் போல குதுகூலமாக பேசி வைத்தார் .. எனக்கும் நம்பிக்கை நெறைய வந்தது. அடுத்த நாள் போன் வந்தது மாமாவிடமிருந்து
"மாப்ளே ..சிக்கல் மாப்ளே .. இங்க 80 க்கு அப்புறம் உள்ள records மட்டும் தாண்டா இருக்கு .. அதுக்கு முன்னாடி உள்ளது எல்லாம் கரையான் அரிச்சு போச்சாம் டா .. இப்ப நான் ஏதோ courtla மனு போட்டு .. அப்புறம் papper ல எல்லாம் விளம்பரம் கொடுத்து ..என்னன்னவோ பண்ணினா தான் கிடைக்குமாம் .. இது எல்லாம் ஒன்னும் நடக்கற காரியமா தெரியல .. இது இல்லாம ஒன்னும் பண்ண முடியாதா..? "
"மாமா .. இது இல்லமா ஒன்னும் முடியாது .. ரொம்ப கழ்டபட்டு இந்த சான்ஸ் வாங்கி இருக்கேன்.. நீங்க கொஞ்சம் ட்ரை பண்ணினா கண்டிப்பா கிடைக்கும் மாமா , please"
"கொஞ்சம் துட்டு செலவான மாப்ளே .. பரவா இல்லையா .. ஒரு 10 வரைக்கும் ஆகும் .. "
"என்ன.. birth certificatekku 10 ஆயிரமா ..!? பரவா இல்ல மாமா .. பண்ணுங்கோ ..please"
"பண்ணி புடுவோம்.." வழக்கம் போல பேசி வைத்தார்.

ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு வழியாக birth certificate வந்தது. அதை companyidam கொடுத்து triple legalization(!?) வங்கி ஒரு வழியாக workpermit வந்தது. முதலில் நான் மட்டும் செல்வதாகவும் பிறகு 3 மாதத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தை வருவதாகவும் முடிவானது. இதற்க்கு முன்பு எனக்கு நேதேர்லண்ட்ஸ் பற்றி அவ்வளவாக பரிச்சயம் இல்லை . அயல்நாடு என்று பேசும் போது நாம் பொதுவாக அமெரிக்கா, ஆஸ்திரேலயா, இங்கிலாந்து , ஜெர்மனி என்று தான் பேசுவோம். முதன்முறையாக நேதேர்லண்ட்ஸ் பற்றி வலை தளத்தில் (Google ) தேடினேன்.

"நேதேர்லண்ட்ஸ் ரொம்ப cold countryam.. என்னோட friend ஆம்ஸ்டெர்டாம் ல இருக்கான். அவன் சொன்னான்.. கண்டிப்பா ஜெர்கின் வேணும் .. தெர்மல்ஸ் வேணும்.. அப்புறம் sweter இருந்த நல்லது ஏன்னா office குள்ள sweter மட்டும் போட்டுக்கலாம் பாருங்கோ .." இது என் மனைவி
"தெர்மல்ஸ் நா என்ன?.. " இது நான்
"அது அப்படி உடம்போட ஒட்டிண்டு இருக்கும் .. innerskku மேல போட்டுக்கணும் .."
"சரி"
"அப்புறம் சூட் ஒன்னு வாங்கிக்கணும் .. tie உங்க கிட்ட இருக்கு .. இன்னும் வேணும்னா கூட ரெண்டு வங்கிக்கொங்கோ .. client placela neata dress பண்ணிக்கணும் .."
"Tie நாலு இருக்கு போதும்"
"சரி .. நல்லதா 4 pant, 4 shirt, அப்புறம் 7 set inners, sox..இருங்கோ..நான் list போடறேன் .. இல்லன மறந்துடும் "
"சரி..இங்க ஒரு onsite checklistnu ஒன்னு பசங்க வச்சு இருக்காங்க.. அது நாளைக்கு உனக்கு forward பண்றேன்"
"சரி அங்க எங்க தங்குவீங்க ?"
"முதல் 7 days hotela தங்கலாம் .. ஆனா அதுக்கு மேல hotela தங்க முடியாதாம்.. பசங்க கிட்ட கேட்டு இருக்கேன் .. வேற project பசங்க அவங்க ..அவங்க project location வேற .. நான் daily ஒரு 30 mins train travel பண்ணனுமாம் .. வேற வழி இல்ல ..அவங்க கூட தான் தங்கிக்கனும்."
"best அது தான்.. first time போய் எங்க எது கிடைக்கும் , என்ன நு முழிக்க வேணாம் பாருங்கோ .. ஊறுகாய் , வத்தல் , எல்லாம் அம்மா போட்டு வச்சு இருக்கா .. எல்லாம் எடுத்துண்டு போங்கோ .."
"வெறும் 20 kg தான் allowed.. 20 kg check in baggage அப்புறம் 10 kg cabin baggage.. அவ்வளவு தான் allowed.. அதுனால நீ ரொம்ப plan பண்ணதே .. எல்லாத்தையும் எடுத்துண்டு போக முடியாது .."
"யாரு சொன்னா.. எங்க அக்கா கனடா போகும் பொது 30 kg check in baggage கொண்டு போனா .. நல்ல கேட்டு பாருங்கோ .. 20 kgla ஒன்னும் பண்ண முடியாது .. cookera 5 kg வரும் "
"என்னது .. cookera.. ? அது எல்லாம் ஒன்னும் வேணம் .. விட்டா grinder எடுத்துண்டு போக சொல்லுவா போல இருக்கு..?"
"Cooker கண்டிப்பா வேணும் .. dresses எல்லாம் கம்மியா போதும்.. சமையல் அயிட்டம் எல்லாம் எடுத்துண்டு போங்கோ .. dress அங்க போய் கூட வாங்கிக்கலாம் .. நான் ஒரு மாச மளிகை சாமானத்தை pack பண்ணலாம்னு நினச்சிண்டு இருக்கேன் .. நீங்க வேற ..?"
"என்ன மளிகை சாமானமா????? !@#$%^.."கொஞ்சம் தலை சுற்றியது.

Airlines இடம் கெஞ்சி கூத்தாடி special permissionaga 30 kg +10 kg வாங்கியாகிவிட்டது .ஒரு வழியாக "onsite check list" படி packing செய்து விட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. 3 தடவை king size பெட்டிய scootiyil வைத்து பக்கத்து அண்ணாச்சி கடையில் wait போட்டு வந்தோம் . குரங்கு அப்பம் பிய்த்த கதை போல.. கொஞ்சம் எடுப்பது .. கொஞ்சம் சேர்ப்பது திரும்ப வெயிட் போடுவது என்று மாறி மாறி நாலாவது முறை 32 kilovil பெட்டியை சீல் வைத்தோம். வேடிக்கை என்னவென்றால் ஒவ்வரு முறயும் நான் எது தேவை எல்லை என்று எடுத்து வைப்பதும் ..எனது தாயாரும் , மனயிவியும் எனக்கு தெரியாமல் பெட்டி உள்ளே ஏதாவது சொருகி வைப்பதும் வாடிக்கையாகி விட்டது.

அயல் நாடு செல்வது பெரிய விழயம் இல்லை ..அதற்கு தயாராவது தான் பெரிய விழயம் . ஒரு வாரமாக ஜவுளி கடை, grand sweets, supermarkets என்று மாறி மாறி ஏறி எறங்கி சோர்ந்து போயாகி விட்டது. பிறகு அம்மாவின் கட்டாயத்தின் பேரில் சொந்தகளுக்கு எல்லாம் கூப்பிட்டு நான் நேதேர்லண்ட்ஸ் போயிட்டு வரேன் என்று எல்லாரிடமும் சொல்லி கொண்டு கிளம்பியாகி விட்டது. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அது ஒரு கார்த்திகை இரவு. Airport செல்ல car வந்தது . கொழந்தை தூங்கி விட்டது . தூளியில் தூங்கும் கொழந்தையை ஒரு முறை பார்த்து விட்டு, சாமியை நமஸ்காரம் செய்தது விட்டு கிளம்பினேன். அப்பாவும் , எனது மனைவியும் என்னுடன் airport வந்தார்கள். எனது நண்பன் கரூர் வெங்கட்ராமனின் முதல் அயல் நாட்டு பயணத்தை கொஞ்சம் நினைத்து பார்க்கிறேன். அவனை துபாய்க்கு அனுப்ப அவனது தாயார், தந்தை, அண்ணா, அண்ணி, அண்ணன் மகள், அக்கா, அக்கா கணவர், அக்காவின் இரண்டு குழந்தைகள் எல்லாரும் ஏர்போர்ட் வந்து இருந்தார்கள். ஏர்போர்ட் கொஞ்ச நேரம் இவர்களை திரும்பி பார்த்ததாக சொல்லி கேள்வி பட்டேன்.

காருக்குள் எனக்கு வியர்த்து கொட்டியது. கண்டிப்பாக பயத்தினால் இல்லை. ஒரு ஜீன்ஸ் சட்டை, அதற்க்கு மேல் ஒரு sweater, அதற்க்கு மேல் ஒரு சூட் , அதற்க்கு மேல் ஜெர்கின் . இதை படிக்கும் போதே உங்களுக்கு வியர்வை வழிவது எனக்கு தெரிகிறது . சென்னையில் இத்தனையும் போட்டு கொண்டு இருக்கும் எனக்கு வியர்வை வழிவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தானே?. ஏன் இவ்வளவும் போட்டு கொண்டு இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா ..? தயவு செய்து இதை என்னுடைய மனைவியடம் கேளுங்கள் . அவளுடைய ஆலோசனையின் பேரில் தான் இதை செய்தேன். பெட்டியை தான் wait போடுவார்கள் , அதற்க்கு தான் 30 kg restriction, ஆனால் நாம் போட்டு கொண்டு இருக்கும் உடைகளுக்கு restriction எதுவும் கிடையாது .. நான் போட்டு கொண்டு இருக்கும் உடைகளை பெட்டியில் வைத்தால் அதில் இருந்து மிக முக்கியமான ஊறுகாய் பாட்டில், மற்றும் இன்ன பிற சாமான்களை வெளியில் எடுத்தாக வேண்டும் ..ஏன் என்றால் அது ஏற்கனவே 32 kilo(30 kilo thaan allowed). என்னுடைய மனைவியின் friends எல்லாரும் இப்படி தான் செய்வார்களாம் .. 4, 5 சட்டைகள போட்டு கொண்டு தான் பிரயாணம் செய்வார்களாம். உங்களுக்கும் wait restriction இருந்தால் இந்த ஐடியா பின்பற்றுங்கள் ..நான் இன்னும் இந்த ஐடியா விற்கு copyrights வாங்க வில்லை.

Airportil எனது மாமனார் காத்துக் கொண்டு இருந்தார். அவர் indian airlinesl 30 வருடங்களாக வேலை செய்து வருகிறார்..அவருக்கு சில பல சலுகைகள் உண்டு. அவரை நம்பி தான் நான் தைரியமாக 32 kilo பெட்டியுடன் வந்து இருக்கிறேன். ஒரு வழியாக மனைவி மற்றும் அப்பாவிடம் விடை பெற்று airportinul சென்றேன் . மனைவி அழுவது தெரிந்தது.

மனைவி திரும்ப திரும்ப சொன்னபடி அடிக்கடி பாஸ்போர்ட் , டிக்கெட் , deputation லெட்டர் இருக்கிறதா என்று மாறி மாறி பார்த்து கொண்டேன் . Immigraiton வரைக்கும் எனது மாமனார் கூட வந்தார். அவர்க்கும் விடை கொடுத்து immigration முடிந்து flightkkaga காத்து இருந்தேன். flight 2 மணிக்கு தான். தூக்கம் ஒரு புறம் தள்ளியது. மறுபுறம் எனது உடைகளின் எடை தள்ளியது. ஒரு மாதிரி போதையில் நடப்பது போல இருந்து இருக்கும் எனது நடை. AIR FRANCE flight. பாரிஸ் சென்று அங்கிருந்து KLM flight மாறி Amsterdam செல்ல வேண்டும். Flight ஏறியவுடன் முதல் வேலையாக, jerkin(2 kg), Suit (750 g), Sweter(750g) அத்தனையும் கழட்டி மேல திணித்து விட்டு படுத்து தூங்கி விட்டேன். யாரோ எழுப்புவது தெரிந்து முழித்து பார்த்தால் விமான பணிப்பெண் சிரித்துக்கொண்டே ஏதோ சாப்பிட கொடுத்தாள். இந்த அரை தூக்கம் மற்றும் மயக்கத்திலும் நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். விமான பணிப்பெண் களில் இந்தியா பெண்கள் தான் அழகு. (ரொம்ப முக்கியம் இப்போ. ). லூ முட்டிக்கொண்டு வந்து முழித்தேன். விடிந்து விட்டு இருந்தது. இப்பொழுது இந்தியா நேரத்தை கணக்கில் கொள்ள வேண்டுமா இல்லை பாரிஸ் நேரத்தை கணக்கில் கொள்ள வேண்டுமா என்று புரிய வில்லை. இப்பொழுது மணி என்ன.. குழப்பமாக இருந்தது. பாத்ரூம் பக்கம் சென்றால் .. ஒரு பெரிய கியூ. என்ன கொடுமை சரவணா.. இந்த விமானங்களில் பாத்ரூம் கியூ ஒரு பெரிய பிரச்னை. ஒரு வழியாக பாரிஸ் வந்து சேர்ந்தேன். நான் பாரிஸ் இறங்கும் போது 4டிகிரி . இங்கிரிந்து இன்னொரு விமானம் மாறி amsterdam வந்து சேர்ந்தேன்.

Amsterdam Airport (Schiphol) மிகவும் பிரமாண்டமாக இருந்தது. ஐரோப்பில் இதுவும் ஒரு முக்கியமான ஏர்போர்ட்.என்னுடைய நண்பனை (நண்பரை!..ஏன் என்றால் அவர் என்னுடைய project manager) வர சொல்லி இருந்தேன். அவர் காத்து கொண்டு இருந்தார். ஏர்போர்ட் க்கு கீழே ரயில்வே ஸ்டேஷன் .. ரயில் கொஞ்ச நேரம் இருட்டில் பிரயாணித்து திடீரென்று வெளிச்சத்துக்கு வந்தது .. அடடா .. மிக அகலமான சாலைகள், மணிக்கு 100 km வேகத்தில் செல்லும் கார்கள், ஒரு பக்கம் ரயில், இன்னொரு பக்கம் திராம், இன்னொரு பக்கம் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் கார்கள், மிக உயரமான கட்டிடங்கள் என்று எனக்கு வியப்பை ஏற்படுத்தின . இந்த நேரத்தில் நீங்கள் என்னை கூர்ந்து பார்த்து இருந்தால் என்னுடைய வாய் பிளந்து இருப்பதை கவனித்து இருப்பீர்கள்.

4 மணிக்கு ஹோட்டல் வந்து சேர்ந்து விட்டேன். நல்ல படியாக நான் வந்து சேர்ந்து விட்ட சேதியை வீடிற்கு சொல்ல போன் பூத்து ஏதாவது இருக்கிறதா என்று தேடினேன். ஒரு போன் அகப்பட்டது.. 1 euro போட்டு பேசினேன் .. என்னுடைய மனைவி தான் எடுத்து பேசினாள். 1 நிமிடம் தான் ..போன் கட் ஆகி விட்டது .. அந்த ஹோட்டல் பணிப்பெண் சிரித்துக்கொண்டே .. "i know its very expensive" என்றாள்.. அட பாவிகளா .. 1 eurona 60 ரூபா .. ஒரு நிமிஷம் தான .. கொள்ளை அடிக்கறாங்க என்று திட்டி கொண்ட ரூம் வந்தேன். ரூம் பிரமாண்டமாக இருந்தது.. பின்ன 4 star ஹோட்டலநா சும்மாவா ?. குடிக்க தண்ணி தேடினேன். என்னடா இது . 4 star ஹோட்டல் .. ஒரு நாளைக்கு 120 euro வாங்கறாங்க .. ஒரு தண்ணி jug வைக்க மாட்டாங்களா என்று reception போன் செய்து தண்ணி எங்கனு கேட்டா ..அந்த பொம்பள "you can purchase the drinking water, but its very expensive.. i would suggest to drink the water from bathroom wash basin tap.." என்றாள் .. அடப்பாவிகளா .. என்று வேறு வழி இல்லாமல் அந்த தண்ணீரை தான் குடித்தேன் .. சும்மா சொல்லகூடாது ..அந்த தண்ணீரும் ரொம்ப நன்றாகவே இருந்தது. பிறகு தான் தெரிந்து கொண்டேன் இந்த நாட்டில் அந்த தண்ணீர் தான் குடி நீர் என்று.

இதோ.. இங்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஓடி விட்டது. இங்குஇருந்து நான் பல நாடுகளுக்கு சென்று வந்து விட்டேன்.ஆனால் என்ன இருந்தாலும் முதல் அனுபவம் எப்போதும் ஸ்பெஷல் தானே ?. என்னிடம் இன்னும் அந்த onsite checklist இருக்கிறது. உங்களுக்கும் அது வேண்டும் தானே ? கொஞ்சம் செலவாகும் okaya?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு