சனி, 21 டிசம்பர், 2013

Cyra the Castle Fairy

This is Shreya's first made up story !

It has been a busy week for Kirsty and Rachale at Princessela Castle ! Today is Friday and they've got to save Cyra the Castle Fairy. Everyone in the castle were moaning and seems very upset. Fela , the children take-carer in the castle couldn't understand why everyone is moaning. She treated all the children in the castle 'Royally' by providing them the Royal Food, Royal Bed and Royal Toys to play. But, Kirsty and Rachale knew exactly why. Cyra, the castle fairy is losing her blue and pink ink, which is making everyone in the castle stay jubilant. Kirsty and Rachale has to save Cyra and her magical ink.

They were thinking about this and when they went near the dressing table of Kirsty they spotted a Yello Glow!. It was.. It was.. Cyra ! She had high heeled slippers, yellow dress, pink hair and blue wings. But best of all is the glistening, pixie dust which roam around Cyra's wand !. Kirsty was very saddened to see the droplets of water coming from Cyra's eyes.

"Why are you crying dear Cyra" asked Kirsty.
"The Goblins have stolen my pink and blue ink, which is keeping everyone in the castle isn't happy. I can't keep the castle happy without my ink" shrieked Cyra
"Oh..no Cyra.. please don't cry Cyra.. we will help you" assured Rachle.

Kirsty, Rachel and Cyra mumbled the magic words "Abbiya ligra..." and suddenly they were where the Goblins were. 

"You are good in convincing the Goblins.. better you go as a 'Ink Collector' and talk to Goblins and request them to give Cyra's ink back" said Rachel to Kirsty.

"Good Idea" said Cyra and turned Kirsty into the Ink Collector and Cyra and Rachel hid into Kirsty's pocket. 

Kirsty, the 'Ink Collector' is trying to meet the Goblin's chief but they didn't listen to Kirsty and their plan didn't work. Kirsty began to blow the trumpet and Goblin's were not able to bear the sound of the trumpet and they allowed her to meet the Goblin's chief.

Kirsty talked to the Goblin's chief and tried to convince him, but he found Cyra and Rachel hiding in Kirstys pockets. 

"Pesky Fairies.." shouted the Goblin's chief and he became angry.
Kirsty slowly explained to him that they are not fairies and explained him how important that ink is and request him to give the ink back for the happiness for the people living in the castle. 

He gave the ink back. She put her ink back into her pocket and Cyra touched the same. Suddenly she disappeared and appear again in Rachel's room. Cyra thanked Rachel and Kirsty for their kind help and said 'Good Bye'. With a swish of magic, Cyra went back to the fairy land and her face was full of excitement. The people in the castle were again merry!. Everyone was praising Kirsty and Rachel for their bravery.  


செவ்வாய், 1 ஜனவரி, 2013

2012 ஒரு டைரி குறிப்பு

2012 எப்படிங்கோ ? நமக்கு டக்கருங்கன்னா  ! 

ஆம்!. இந்த வருட பாதியில் அலுவல் காரணமாக லண்டனுக்கு பயணம் செய்து கடந்த ஆறு மாதங்களாக இங்கிருந்து தான் வேலை செய்து வருகிறேன். ஒரு புதிய சூழல், ஒரு புதிய மாற்றம்  எல்லாருக்கும் மிகவும் அவசியம் என்றே நான் எண்ணுகிறேன், இல்லையென்றால வாழ்க்கை  ஒரு தேக்க நிலையில் இருப்பதாகவே  தோன்றும். இந்த வருடமும் இன்போசிஸ் கம்பனியின் அதே வாடிக்கயளருக்காக தான் வேலை செய்தேன். பதவி உயர்வு, அயல் நாட்டு வேலை, வேலைக்கான பாராட்டு எல்லாம் சேர்ந்து கடந்த வருட அலுவலை நிறைவாகவே வைத்து இருந்தது.

அனன்யா, தான்யவிற்க்கு ஒரு வயது பூர்த்தி ஆனது. இருவரும் கவிழ்ந்து, தவிழ்ந்து,முட்டு போட்டு நடந்து, விழுந்து, எழுந்து நடை பழகியதை பக்கத்தில் இருந்து பர்ர்த்து மகிழ முடிந்தது. இந்த பாக்கியம் எனக்கு ஸ்ரேயா விழயத்தில் கிடைக்க வில்லை. இருவருக்கும் இன்னும் பல் வர வில்லை, பேச்சும் வரவில்லை, ஆனால் சேட்டை நிறைய வந்து இருக்கிறது. இருவரும் நன்றாக விரல் சூப்பிகிறார்கள்.  இருவர் சூப்பும் விரல்கள் தான் வேறு வேறு. Gangam style பாட்டு போட்டால் அழுகையை அந்த ஸ்பாட்டில் நிப்பாட்டிவிட்டு அடுத்த நொடியில் சிரித்துக்கொண்டு தலையை ஆட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும், எப்படி இந்த பட்டு youtube ஹிஸ்டரியில் highest viewed video ஆனது என்று. தான்யா எல்லாவற்றையும் சாப்பிட பார்க்கிறாள், பேப்பர் , குப்பை உட்பட. ஆனால் சொல்வதை எளிதாக புரிந்து கொள்கிறாள். 'வாயில என்ன இருக்கு கொடு' என்று சொன்னால் வாயை திறந்து  பாதி சவைத்த பேப்பரை எடுத்து கொடுத்து விடுகிறாள்.. இல்லையென்றால் தனது வாயிற்குள் இரண்டு பெரிய விரல்கள் சென்று காயபடுத்தும் என்று தெரிந்து இருக்கிறது போலும். சோனியா காந்தி போல அடிக்கடி கையை ஆட்டி சிரிக்கிறாள்.  அனன்யா வீட்டில் மிகவும் சமத்து ஆனால் குழந்தை வண்டியில் ஒட்கார மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்.. எப்பொழுதும் தூக்கி வைத்து கொள்ள வேண்டி இருக்கிறது. 

முன்பு எங்களுடைய முழு கவனமும் ஸ்ரேயா ஒருத்தியிடம் மட்டும் தான் இருந்தது.. ஆனால்  அது இப்பொழுது மூன்றாக பிரிந்து இருக்கிறது, இது ஸ்ரேயாவிற்கும் புரிந்து இருக்கிறது. அம்மா அருகில் படுத்துக்கொள்ள வேண்டும், அம்மா மடி வேண்டும் என்று எப்பொழுதும் ஆசைபடுகிறாள், ஆனால் அது கிடைக்காத போது சிறிது வருத்தப்பட்டாலும் எடுத்து சொல்லும் போது  புரிந்து கொள்கிறாள்.  பெரும்பாலான நேர மற்றும் கவணம்  மெனுக்கிடல் இந்த இரட்டை குழந்தைக்களுக்கு செல்வதால், பெரும்பாலான நேரங்களில் ஸ்ரேயா தானாகவே தன்னுடைய காரியங்களை பார்த்து கொள்கிறாள்.  இந்த வயதிற்கு, இந்த புரிதல் அறிது என்றே நான் எண்ணுகிறேன். இது எங்களுக்கு சில சமயம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஸ்ரேயா இப்பொழுது Year 2 செல்கிறாள். கலாச்சார மாற்றம், மொழி, புதிய சூழ்நிலை, இவைகளை இவள் எப்படி எதிர் கொள்ள போகிறாள் என்று மிகவும் பயந்தேன், ஆனால் நான் பயந்த மாதிரி ஆகாமல், இவளால் மிக எளிதாக இந்த சூழ்நிலையுடன் ஒன்றி போக முடிந்து விட்டது. சில சமயங்களில் இவளுடைய british english  எனக்கு புரிவது இல்லை.  ஆனால் இங்கு இவர்கள் பாடம் சொல்லி கொடுக்கும் முறை முற்றிலும் வேறாக இருக்கிறது. பாடம் படித்தல் பள்ளியில் மட்டும் தான். பள்ளிக்கு மதிய உணவுடன் மட்டும் சென்றால் போதும், புத்தகம், நோட்டு, பென்சில், எதுவும் வேண்டாம்.  பள்ளியில் படிப்பு இவர்களுடைய சிந்தனையை தூண்டும் விதமாக அமைந்து இருக்கிறது.  'முயல்', 'பொந்து' என்ற இரண்டு வார்த்தைகளை  வைத்துகொண்டு சொந்தமாக ஐந்து வாக்கியங்கள் அமைக்க சொல்கிறார்கள். ஐந்து வாக்கியங்களை மனப்பாடம் செய்து எழுதி மிக அதிக மதிப்பெண் பெற்ற ஸ்ரேயாவிற்கு இது கடினமாக இருக்கிறது. ஆனால் இதுவும் பழகி போகும் என்றே நான் நம்புகிறேன்.  

கிட்டத்தட்ட 10 வருடங்கள் அலுவலகம் சென்று ஓடி ஆடி வேலை செய்த சௌம்யாவிற்கு  சென்ற வருடம் (2012) ஒரு புது அனுபவம். அலுவல் வேலையே மூட்டை கட்டி வைத்து விட்டு முழு நேர குடும்ப 'இஸ்த்ரி'யாக குழந்தைகளையும் என்னையும் பார்த்து கொண்டாள். இரண்டு கை கொழந்தைகள், இன்னொரு பள்ளி செல்லும் கொழந்தை, அவளது படிப்பு, வீட்டு வேலைகள் இவை அனைத்தையும் மிக நேர்த்தியாக, இலகுவாக கையாளுவது கண்டு பல முறை நான் ஆச்சர்யபட்டு இருக்கிறேன். இவள் வீட்டை பார்த்து கொள்வதினால் தான் நான் எந்த கவலையும் இல்லாமல் அலுவலுக்காக அலுவல்  பளுவை சுமக்க முடிகறது. 

சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் விளையாட்டாக ஆரம்பித்த www.subbuskitchen.com வலை தளம் இன்னும் கொஞ்சம் வளர்ச்சி அடைந்ததாகவே நினைக்கிறேன். 1200 visitors per day  , 5000 page views per day , 3800 facebook  likes  என்று ஏறுமுகமாக இருந்தது. ஆனால் இதற்காக நாங்கள் கொட்டும் உழைப்பு மிகவும் அதிகம். இந்த உழைபிற்கெற்ற  வருமானம் இருக்கிறதா என்றால் அது தான் இல்லை. ஆனால்  இதற்காக உழைப்பது பிடித்து இருக்கிறது. மேலும் மேலும் இதற்காக உழைக்கவே ஆசை படுகிறோம். இந்த உழைப்பு என்றாவது ஒரு நாள் இதற்கான ஊதியம் ஈட்டும்  என்று நம்புகிறேன். அன்றாட வேலை தவிர நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிடித்த எதாவது ஒன்றில் சொற்ப நேரம் சிலவிட வேண்டியது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். இது, பாட்டு, நடனம், ஓவியம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி நமக்கு பிடித்ததில் நாம் நேரம் சிலவிடுவது  மிகவும் அவசியம். 


நல்ல வேலை, முத்தாக மூன்று குழந்தைகள், அன்பான துணைவி, அரவணைக்கும் பெற்றோர் -  குறை ஒன்றும் இல்லை-மறை மூர்த்தி கண்ணா ! 2013ம் இப்படி இருக்கவே நான் விழைகிறேன்.  உங்களுக்கும் 2013 அருமையாக அமைய வாழ்த்துக்கள்.


சனி, 24 டிசம்பர், 2011

கண் வலி

அன்று எப்பொழுதும் போல் விடியவில்லை எனக்கு. இடது கண் இமைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொண்டு பிரியாமல் இருந்தது. கொஞ்சம் கண்களை கசக்கி கண்களை திறந்தேன். கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. என்னடா இது நேற்று தூங்கும் போது நன்றாக தானே இருந்தது என்று நினைத்து கொண்டே கண்ணாடியில் கண்களை பார்த்தேன். இடது கண் முழுதும் சிகப்பாக இருந்தது. விஜயகாந்த் “தமிழன்டா ” என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லும்போது அவருடைய கண்கள் எப்படி இருக்குமோ அப்படி அவ்வளவு சிகப்பாக இருந்தது எனது இடது கண் . இந்த சமயம் நான் அலுவல் காரணமாக புனாவில் இருந்தேன். உடனடியாக doctor யாரையும் சென்று பார்க்க முடியவில்லை . அருகில் இருந்த ஒரு மெடிக்கல் ஸ்டோரில் சென்று காண்பித்து ஒரு drops வாங்கி போட்டு கொண்டு , அலுவலகம் சென்றுவிட்டேன் . உடன் வேலை செய்பவர்கள், ‘Venkat, what happend to your eyes.. is it contagious..?’ என்று கேட்டு பதிலுக்கு காத்திராமல் இரண்டு அடி தள்ளி நின்றார்கள். அடுத்த இரண்டு நாட்களில் கண்கள் சிகப்பு இன்னும் அதிகம் ஆனது. கண்ணின் கீழ் லேசாக வீக்கம் கட்டி கொண்டது. கண் ஓரத்தில் அடிக்கடி மஞ்சள் அழுக்கு சேர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் சென்னை வந்து விட்டேன் . ஏற்போர்டில் என்னை pickup செய்ய வந்த cab driver, என்ன சார் , ‘Madras eyea ‘ என்று தரையை பார்த்துக்கொண்டே கேட்டார். ‘இல்லை , இது புனே eye’ என்று பதில் சொன்னேன் . இதை Facebooklum status அப்டேட் செய்தேன்.

வீட்டிலும் இது ‘madras eye’ என்று முடிவு கட்டி விட்டார்கள். குழந்தை அருகில் வருவதை தவிர்த்தேன். அடிக்கடி கை அலம்பி கொண்டேன். சென்னை வந்த அன்றே என் வீடிற்கு அருகில் இருக்கும் (வேளச்சேரி) அகர்வால் கண் மருத்துவமனைக்கு சென்றேன். அகர்வால் மிகவும் புகழ் பெற்ற கண் மருத்துவமனை என்பது குறிப்பிட தக்கது. அந்த டாக்டருக்கு ஒரு 35 வயது இருக்கும் . எனது இரண்டு கண்களையும் லென்சில் வைத்து ஆராய்ந்து விட்டு , இது ‘Viral Contagios’ (வைரஸ் தொற்று நோய்) என்று சொல்லி இரண்டு சொட்டு மருந்துகள் கொடுத்தார். ஒன்று TOBA-F எனப்படும் ஒரு மருந்து. இதை மணிக்கு ஒரு தரம் இரண்டு சொட்டுகள் விட சொன்னார்.

அடுத்த இரண்டு நாட்களில் இடது கண்ணில் இருந்த சிகப்பு ஓரளவு குறைந்தது, ஆனால் அடுத்த கண்ணில் சிகப்பு தெரிய ஆரம்பித்தது. இது என்னடா வம்பா போச்சு .. இந்த கண்ணுல உள்ள சிகப்பு அடுத்த கண்ணுக்குக்கு போய் விட்டதா என்று நினைத்து கொண்டே , அதே TOBA-F மருந்தை இரண்டு கண்களிலும் விட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். இந்த கண்களோடு ஒரு நாள் விடாமல் அலுவுலகம் வேறு சென்றேன். அலுவலகத்தில் என்னை பார்த்து எல்லாரும் தெறித்து ஓடினார்கள். வழக்கம் போல், தரையை பார்த்துகொண்டு, கொஞ்சம் தூரத்தில் இருந்தே சிலர் பேசினார்கள். ரெஸ்ட் எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கும்படி சிலர் அறிவுரை சொன்னார்கள்.

நான் 2 பாட்டில் TOBA-F காலி செய்து விட்டேன். இன்னும் கண் எரிச்சல், சிகப்பு, குறைந்த பாடு இல்லை. காலை கண் இமைகள் ஒட்டிக்கொண்டு திறக்க முடியாமல் இருக்கும். தண்ணீரில் கண்களை ஊறவைத்து திறக்க வேண்டி இருந்தது. மீண்டும் அகர்வால் (இரண்டாவது முறை) சென்று அந்த டாக்டரிடம் காண்பித்தேன். ‘சார், இது வைரல் infection. இதுக்கு TOBA-F தவிர வேற எந்த மருந்தும் கிடையாது. Based on your body immunity, உங்களுக்கு இது தானாகவே சரி ஆயிடும். நீங்க TOBA-F continue பண்ணுங்க. You will be alright’ என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார்.

வேறு வழி இல்லாமல் நான் இன்னொரு TOBA-F வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தேன். அடுத்த நாள் எனது தம்பியின் (cousin) கல்யாணத்திற்கு கரூர் சென்றேன். எவரும் குழந்தைகளை என் அருகில் வர அனுமதிக்க தயங்கினார்கள். ஆனால் யாரும் இந்த கண்வலியோட இவன் ஏன் இங்க வந்தான் என்று என்னிடம் கேட்க வில்லை, ஆனால் கண்டிப்பாக ஒருவராவது நினைத்து கொண்டு இருப்பார்கள். நான் கல்யாணம் அட்டென்ட் பண்ணும் இந்த நாளோடு எனக்கு கண்வலி வந்து 2 வாரம் முழுதாக முடிந்து விட்டது. எனது வீட்டில் யாருக்கும் இந்த கண்வலி வரவில்லை. அதனால் இது தொற்று வியாதி (madras eye) இல்லை என்று எனக்கு தோன்றியது. அனால் இதை சொல்லி மற்றவர்களை convince பண்ண எனக்கு விருப்பமில்லை.

4 பாட்டில் TOBA-F தீர்த்து விட்டேன். இப்பொழுது இந்த சொட்டு மருந்து போடும் போது கண்கள் ஓரத்தில் ஒரு எரிச்சல் வேறு வந்தது. திரும்ப அகர்வால் சென்று அதே டாக்டரை பார்த்தேன் . ‘சார் , இதோட 3 weeks முடிந்து விட்டது. எனக்கு இன்னும் இந்த கண் வலி குறையவே இல்லை . அதுக்கு மேல இப்போ இந்த கண் எரிச்சல் வேறு.. வேறு எதாவது treatmet பண்ண வேண்டுமா?’ என்று கேட்டேன். அவரோ கூலாக ‘ நான் முன்னமே சொன்ன மாதிரி இது வைரல் infection, இதுக்கு மருந்து கிடையாது. எல்லாருக்கும் இது 1 வாரத்தில் சரி ஆயிடும், உங்களுக்கு கொஞ்சம் கூடுதலா ஆகறது. You will be alright.. நீங்க TOBA-F continue பண்ணுங்க .. வேற மருந்தே இதற்க்கு கிடையாது. உங்களுக்கு கொஞ்சம் immunity கம்மி போல ’ என்று சொன்னார்.

மேலும் இரண்டு TOBA-F பாட்டில் காலி செய்தேன். ஆனால் எனக்கு கண் வலி அதிகம் ஆனதே தவிர குறைந்த பாடில்லை. காலை கண்கள், ரத்த சிவப்பாக இருக்கும். இதற்கும் மேலும் பொறுக்காமல், எங்களுடைய குடும்ப டாக்டரிடம் காண்பித்தேன். அவர் அடையாரில் இருக்கும் வேறு ஒரு கண் மருத்துவரை பரிந்துரை செய்தார். அவரை போய் பார்த்தேன்.

இவருடைய கிளினிக் உள்ளே ஒரு தெய்வீக மணம் கமிழ்ந்தது. சுவர் முழுக்க சுவாமி போஸ்டர்ஸ்/படங்கள். கர்மா என்றல் என்ன என்று ஒரு விளக்க போஸ்டர் வேறு.. மெல்லிதாக வீணை இசை ஒலித்தது. ஒரே ஆன்மீக மயமாக இருந்தது. இந்த டாக்டர்க்கு ஒரு 45 வயது இருக்கலாம். பக்தி பழமாக இருந்தார். நோயாளிகளை அவரே வந்து அவருடைய ரூமிற்கு அழைத்து செல்கிறார் .. மீண்டும் சிரித்த முகத்துடன் வந்து வழி அனுப்பிகிறார். நிரம்ப சிரித்து பேசுகிறார். அவர் என்னுடைய கண்களை பார்த்து விட்டு.. இது வைரல் infectione இல்லை என்றார். “TOBA-F is nothing but a soframycin.. அதை போடறதுனால் எந்த ப்ரோயஜனமும் இல்லை. “ என்று சொல்லிவிட்டு எனது கண்களை சுத்தம் செய்தார்.. இரண்டு மூன்று மருந்துகளை கண்களில் விட்டு துடைத்து விட்டார் . கண்ணாடியை காண்பித்தார்.. என்னால் நம்பவே முடிய வில்லை . கண்களில் சிகப்பு இருந்த அடையாளமே இல்லாமல் உஜாலா கண்ணாக மாறி விட்டது. “TOBA-F தூக்கி குப்பைல போடுங்கோ. நான் வேற ரெண்டு drops எழுதி தரேன்.. இன்னும் ஒரு வாரத்துக்கு இதை போடுங்கோ. இப்போவே நீங்க alright, but இந்த drops is for preventive” என்றார். எனக்கு என்னாலையே நம்ப முடிய வில்லை. என்னடா இது ஒரே சிட்டிங்கல சரி பண்ணிட்டாரே என்று அவருக்கு “ரொம்ப தேங்க்ஸ் சார் .. “ என்றேன் .. அவரும் “தேங்க்ஸ் எதுக்கு சார் .. எல்லாம் நாமளே பண்றதா மனுஷா நினச்சிண்டு இருக்கா. ஆனா அது தப்பு. எல்லாம் பகவான் பண்றான்.. நாம எல்லாம் வெறும் கருவிகள் தான் அவனுக்கு.. அவ்வளவு தான் . Smile a lot.. it cost’s nothing’ என்று ஒரு மினி அட்வைஸ் மற்றும் பிரசங்கம் கொடுத்து விட்டு reception வரை வந்து வழி அனுப்பினார். இப்போ நீங்க ஏரோ பிளேன் கூட ஓட்டலாம். அவ்வளவு பக்காவா இருக்கு உங்க பார்வை என்று சொன்னார்.

நான் ஒரு மாதம் பட்ட அவஸ்தையை இவர் 30 நிமிடத்தில் குணம் ஆக்கி விட்டார். எங்கு இருக்கிறது தவறு ? எனது அருமை நண்பர்களே.. நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான்




  • ஒரு பெரிய ஆஸ்பத்ரியின்பெயரை வைத்து கொண்டு, வீதிக்கு வீதி ஆஸ்பத்திரி நடத்தும் இந்த corporate முதலைகளிடம் சிக்கி கொள்ளாதீர்கள். அகர்வால் கண் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. இந்த புகழை பயன்படுத்தி அவர்கள் சென்னையின் பல இடங்களில் ஆஸ்பத்திரி ஓபன் செய்தார்கள் /செய்து கொண்டு இருக்கிறார்கள். பெரும் அளவில் விளம்பரம், மிகவும் பிரமாண்டமாக ஆஸ்பத்ரியை கட்டி கல்லா கட்ட பார்கிறார்கள். ஆனால் அவர்களால் எல்லா ஆஸ்பத்திரியையும் திறமையாக நிர்வாகம் பண்ண முடியவில்லை . நல்ல மருத்துவர்கள் கிடைப்பதில்லை. தனியாக கிளினிக் ஓபன் பண்ணி கல்லா கட்ட திறமை இல்லாத மருத்துவர்கள் தான் இங்கு வேலைக்கு சேர்கிறார்கள். இவர்களால்4 வாரம் ஆகியும் என் கண் வலியை குண படுத்த முடியவில்லை.


  • இது அகர்வாலுக்கு மட்டும் தான் என்று இல்லை . நேற்று மருந்து வாங்க அப்போல்லோ Pharmacy, இந்திரா நகர் , அடையாறு சென்றேன் . doctor Prescription பார்த்து மருந்து எடுத்து தர அங்கு வேலை செய்பவர்களால் முடிய வில்லை .


  • எனக்கு தெரிந்து Dr. Bathras, KKNR, Dr. Mohans, என்று பல கிளைகள் உள்ள எல்லா மருத்துவமனையிலும் இதே நிலை தான்.



  • இப்பொழுது இதை போல் pre-school chain தெருவுக்கு தெருவு வந்து கொண்டு இருக்கிறது. இங்கும் இதே நிலை தான். இதை பற்றி பின்பு தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

முடிந்த வரை, இதை போல உள்ள chain of ஆஸ்பத்ரியில் சிக்காமல் சாதுர்யமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் . !

குறிப்பு : எனது கண்கள் குணமானதற்கு பெரிய பாளையத்தம்மன் பிரார்த்தனை தான் காரணம் என்று எனது மாமியார் சொல்கிறார். இதில் எனக்கு உடன் பாடு இல்லை என்றாலும் அவரது நம்பிக்கையை புண்படுத்த விரும்ப வில்லை. :-)

வெள்ளி, 21 மே, 2010

ஆஸ்பத்திரி அவஸ்தை!

மூட்டு வலியினால் அவ்வப்போது எண்ணெய் தடவிக் கொண்டும் சில மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டும் இருந்த எனது தந்தையை இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று சென்னையிலயே மூட்டு சிகிச்சைக்கு பெயர் பெற்ற MIOT மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். எழுபது வயதை கடந்த Dr மோகன்தாஸ் தான் மூட்டு சம்பந்தமான அத்தனை நோயாளிகளையும் பார்க்கிறார். இவர் தான் MIOT மருத்துவனையின் நிறுவனர் மற்றும் தலைவர் கூட. ஐந்து நிமிடிங்களில் ஐந்து நோயாளிகளை பார்க்கிறார். இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு Dr பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மூட்டை மடக்கி பார்த்து விட்டு இது ஆர்த்ரசிஸ் என்றும், ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் இதை சரி பண்ணி விடலாம் என்றும், காலை வந்தால் அன்றே அறுவை சிகிச்சை செய்ய பட்டு அன்று இரவே நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று சொல்லி விட்டு அடுத்த நோயாளியை பார்க்க சென்று விட்டார். எங்களால் அடுத்த கேள்வியை கூட கேட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் இன்னொரு அம்மணி வந்து ஒரு மூட்டுக்கு Rs 25 ,000 ஆகும் என்றும் இரண்டு மூட்டையும் ஒரே நேரத்தில் பண்ணி விடுவது நல்லது என்றும் பண்ணாது போனால் நாளடைவில் முழு மூட்டும் பாதிப்பு அடைந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேரிடும் என்றும் சொன்னார். வீடிற்கு வந்து சிலரிடம் கலந்து ஆலோசித்ததில் அறுவை சிகிச்சை தான் இதற்க்கு நிரந்தர தீர்வு என்று முடிவானது. எனது தந்தையும் இரண்டு மருதுவர்களிக்டம் சென்று மாற்று கருத்து கேட்டதில் அவர்களும் அறுவை சிகிச்சையை தான் பரிந்துஉரைத்தார்கள். ஆகவே ஒரு நல்ல நாளில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அட்மிட் ஆவது என்று முடிவனாது.

திட்டமிட்ட நாளில் காலை 7 .30 க்கு மருத்துவனை சென்றோம். இங்கிருந்து ஆரம்பமாகிறது அவஸ்தை. தற்பொழுது அறை எதுவும் காலியாக இல்லை என்றும் 8 மணிக்கு மேல் அறை நிலையை பார்த்து அறையை எங்களுக்கு கொடுப்பதாகவும் சொன்னார்கள். எனது தந்தையை எதுவும் சாப்பிடாமல் வர சொல்லி இருந்தார்கள். 8 மணி என்பது 9 மணி ஆகியும் எங்களுக்கு நிலைமை தெரிய வில்லை. எனது அப்பா வேறு புலம்ப ஆரபித்து விட்டார். போய் சத்தம் போட்டதில் non-ac ரூம் தான இருக்கிறது என்று ஒரு ரூமை கொடுத்தார்கள். நாங்கள் ரூமிற்கு சென்ற போது தான் தெரிகிறது அது நான்கு பேர் சேர்ந்து இருக்கும் ஒரு ரூம் என்று. மூத்திரம் நிறைந்த மூத்திர குடுவை வேறு ஒரு கட்டிலின் கீழ். அதை எடுக்க ஆள் யாரும் இல்லை. எனது தந்தை ஏறக்குறைய திரும்ப வீடிற்கு கிளம்ப ரெடி ஆகி விட்டார். நான் திரும்ப சென்று சண்டை போட்டதில் இந்த ரூம் மட்டும் தான் இருக்கிறது என்றும் விருப்பமில்லயனில் எங்களை இன்னொரு நாள் வருமாறும் மிகவும் எளிதாக சொன்னாள். வேறு வழி இன்றி நாங்கள் அந்த அறையில் இருந்தோம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒருவரும் வந்து பார்க்க வில்லை. போய் பார்த்ததில் ஒரே ஒரு nurse தான் எல்லா ரூமிற்கும் ஓடி கொண்டு இருக்கிறாள். கேட்டால் ஆள் பற்றாகுறையாம். மணி 11 தாண்டி விட்டது. பட்டினியின் காரணத்தால் அப்பா கோவத்தில் முணுமுணுத்துக்கொண்டு இருந்தார். எப்பொழுது அறுவை சிகிச்சை, யார் மருத்துவர் என்ற எந்த தகவலும் இல்லை. சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு nurse வந்து ரத்தம் எடுத்து சென்றாள். அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் ஒரு குத்து- கொஞ்சம் ரத்தம், கேட்டால் சென்ற முறை எடுத்த ரத்தம் பரிசோதனைக்கு பத்தாது என்கிறாள். X-ray catridge இல்லையென்பதால் x-ray வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். ECG எடுத்து, Doctor இல்லாததால் Doctor opinion வேண்டாம் என்று விட்டார்கள். அவர்கள் கொண்டு வந்த BP machine வேலை செய்யவில்லை. ஏதோ குத்து மதிப்பாக ரீடிங் எடுத்தார்கள். இது எல்லாம் தேவை இல்லை என்றால் எதற்காக இந்த test எடுக்க சொல்லுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை . அவர்கள் கொடுத்த கவுனில் ரத்தக் கறை, ஆங்கங்கே கிழிசல்கள். அப்பா கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டார். லட்சகணக்கில் பணம் செலவு செய்து தானே வருகிறோம்... அரசு மருத்துவமனையை விட மோசமாக இருக்கிறது இங்கே. ஒரு வழியாக அறுவை சிகிச்சைக்காக மதியம் 1 மணிக்கு அழைத்து சென்றார்கள். ஆபரேஷன் முடிந்து post operative வார்ட்க்கு கொண்டு சென்று விட்டார்கள். ஆபரேஷன் முடிந்து அன்றே நடந்து செல்லலாம் என்று சொன்னார்களே என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வில்லை. அடுத்த நாள் காலை ரூம்க்கு மாற்றிவிடுவார்கள் என்று சொனார்கள், எங்களை வீடிற்கு அனுப்பி விட்டார்கள்.

அடுத்த நாள் காலை சென்று கேட்டதில் ரூம் இல்லாததால் இன்னும் post operative வார்ட்லையே வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது .. என்ன கொடுமை சரவணா ..? நானும் அங்கும் இங்கும் அலைந்தும் ஒரு ப்ரோயஜனமும் கிட்ட வில்லை. ஒரு வழியாக மதியம் 12 மணி அளவில் ரூம்க்கு மாற்றினார்கள். இதுவும் shared ரூம் தான். ஆபரேஷன் பண்ணியதில் இருந்து இது வரை எந்த doctor வந்து பார்க்க வில்லை. Doctor ரௌண்ட்ஸ் எதுவும் இங்கு கிடையாதா ? Doctors வர வேண்டாம், ஆனால் nurses வரலாம் இல்லியா .. அதுவும் கிடையாது. சாயங்காலம் 4 மணி அளவில் ஆபரேஷன் பண்ணின doctor வந்து பார்த்தார். இவர் நன்றாக பேசினார். என்ன operation, எப்படி பண்ணினார் என்பதை விளக்கினார். Physiotherpist ஏன் வந்து பார்க்க வில்லை என்று பக்கத்தில் இருந்த நர்சை கேட்டார் .. physiotherapist லீவ் என்று பதில் வந்தது . இவ்வளவு பெரிய மருத்துவமனயில் ஒரு physiotherapist தான் என்பதை நம்ப முடியவில்லை. Doctor அவரை அடுத்த நாள் discharge பண்ணுவதாக சொன்னார். வேறு வழி இல்லாமல் அடுத்த நாளுக்காக காத்து இருந்தோம். ஒரு வழியாக அடுத்த நாள் பில்லிங் department உடன் போராடி discharge ஆகி தெறித்து ஓடி வந்து விட்டோம். அடுத்த முறை MIOT செல்லும் முன் யோசியுங்கள். Dr. மோகன்தாஸ் எல்லோருக்கும் ஆபரேஷன் தான் தீர்வு என்று சொல்லி எல்லோரையும் ஆபரேஷன்க்கு அனுப்புகிறார். ஒரு வேலை அது தான் அதற்க்கு நிரந்தர தீர்வாகவும் இருக்கலாம் . ஆனால் உங்களை கவனிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் இன்னும் ரெடியாக இல்லை. என்ன தான் நல்ல மருத்துவர்கள் இங்கு இருந்தாலும் நல்ல பெட் கவர், தலையணை உறை கூட இங்கு இல்லாதது பரிதாபம். ஒரு வேளை எல்லா ஆஸ்பத்திரியுலும் இதே கதி தான என்று தெரிய வில்லை.

முடிந்த வரைக்கும் ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதை தவிர்க்கவும். தவிர்க்க இயல வில்லை என்றால் எத்தனை சீக்கிரம் எஸ்கேப் ஆக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே வற முயற்சி செயுங்கள். எதாவது முன் எச்சரிக்கையாக டெஸ்ட் எடுக்கலாம் என்று யாராவது சொன்னால் வேண்டாம் என்று சொல்லி பாருங்கள். கேட்க வில்லையெனில் அலறவும் , தரையில் குப்புற படுத்து அழவும், இல்லை என்றால் மாட்டினீர்கள். சுஜாதா ஒரு கட்டுரையில் சொன்னது போல , ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மன சோர்வு அளிக்கும் இடம். எல்லாரும் ஆரோக்யமாக நம்மை சுற்றி இருக்கும் போது நாம் மட்டும் கண்காட்சி பொருள் போல படுத்து இருக்க, கண்டவர் கண்ட நேரத்தில் வந்து கண்ட இடத்தில ஊசி கொடுத்து , பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து , ஷகிலா ரேஞ்ச்க்கு உடம்பெல்லாம் தெரியும் படி நீல /பச்சை கவுன் அணிவித்து (MIOT என்றால் அதில் கொஞ்சம் கிழிசல்கள் /ரத்த கறை இருக்கலாம்) .. நம்மை பாடா பாடு எடுத்து விடுவார்கள்.

MIOT மருத்துவமனையில் என்னுடைய அனுபவம் எல்லாருக்கும் இருக்க வேண்டும் / எல்லா காலத்திலும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. !.

வியாழன், 3 டிசம்பர், 2009

2009 ஒரு டைரி குறிப்பு

எந்த நேரத்தில் நான் 2008 ஒரு டைரி குறிப்பு எழுதினேன் என்று தெரியவில்லை. அதில் 2008 எனக்கு மிகவும் நல்ல ஆண்டாக அமைந்ததாகவும் நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தது அந்த ஆண்டில் தான் என்றும் குறிப்பிட்டு இருந்தேன். 2009 மிகவும் படுத்தி எடுத்து விட்டது. 2009 ஆரம்பத்தில் எனது மனைவி மற்றும் குழந்தை இந்தியா சென்று விட்டார்கள். இதோ 2009 முடிய போகிறது. வாழ்க்கை வெப் காமெராவில் தான் நடக்கிறது. எனது மகள் அவளது சொப்பு சாமான்களில் maggi பண்ணி அதை வெப் காமெராவில் எனக்கு ஊட்டுகிறாள் . நான் அவுளுக்கு வெப் காமெராவில் கதை சொல்கிறேன். இவ்வளவு பீலிங் பண்றவன் உடன் இந்தியா வந்து வேலை பண்ண வேண்டியது தானே என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. ஒரு IT கம்பெனி யின் "uncertanity" (நிலையற்ற தன்மை) பற்றி உங்களுக்கு தெரிந்து இருந்தால் இந்த கேள்வியை நீங்கள் கேட்டு இருக்க மாட்டீர்கள். என்னை விட என் மனைவி தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்க வேண்டும் . ஆனால் ஒரு போதும் இதை அவள் வெளி` காட்டி கொண்டது இல்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவளுடைய உடல் உபாதைகளுக்கு நானும் இந்த மன உளைச்சலும் தான் காரணமோ என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் சகித்து கொள்கிறாள். இந்த சகிப்பு தன்மை தான் எங்களுடைய உறவை மேம்படுத்துகிறது.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மானாக் கடை.
என்ற குறள் நினைவுக்கு வருகிறது.



எனது தாய், தந்தைக்கு சஷ்டியபத்பூர்த்தி என்று சொல்லப்படும் அறுபதாம் கல்யாணம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடையில் விமரிசயாக இந்த ஆண்டு நடந்தது. எனது தாயாருக்கு திருமணம் நடந்தே அதே வீட்டில் வைத்து அறுபதாம் கல்யாணமும் பண்ணி கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. உறவினர்கள், தெரிந்தவர்கள் பலர் வந்து இருந்து விசேஷத்தை சிறப்பித்து கொடுத்தனர். இவர்களுக்கு சதாபிஷேகம் பண்ணி வைக்கும் வாய்ப்பையும் கடவுள் எனக்கு அருள வேண்டும். அதற்கான தேக பலத்தையும் ஆரோகியத்தையும் அருளுமாறு சுசீந்தரம் தாணுமாலயனை வேண்டி கொள்கிறேன். சஷ்டியப்தபூர்த்தி என்பது ஒரு மினி கல்யாணம் போல. ஏகப்பட்ட திட்டமிடதலும், உழைப்பும் தேவை. பணம் மூன்றாவது தான். இந்த திட்டமிடுதலையும் உழைப்பையும் எனது மாமா ஏற்று கொண்டார் (கிச்சா மாமா) விசேஷத்தை கல்லிடையில் அவரது ஏற்பாட்டில் நடந்தது. நாங்கள் ஒரு சுற்றலா போல ஜாலியாக இரண்டு பெட்டிகளுடன் கல்லிடை போய் விசேஷத்தை கழித்து கொண்டோம். உழைப்பு முழுவதும் மாமாவுடையது. மாமா ஒரு அறிய மனிதர். இன்று இங்கு நான் உட்பட பெரும்பாலனோர் சுயநலவாதிகளே. ஆனால் அவர் தன் குடும்பம் தன் வேலை என்று பார்க்காமல் எல்லாருக்காகவும் உழைக்க கூடியவர். இன்னும் இருபது வருடம் கழித்து அவரிடம் சென்று எனது பெற்றோர்களின் எண்பதாம் கல்யாணத்தையும் அவர் தான் நடத்தி தரவேண்டும் என்று சொன்னாலும், கொஞ்சமும் தயங்காமல் அவர் "பண்ணி புடுவோம் மாப்ளே" என்று தான் சொல்வார். வாழ்க நீ என் மாமா பல்லாண்டு!.

2008 இன் இறுதியில் விளையாட்டாக நாங்கள் ஆரம்பித்த http://www.subbuskitchen.com/ என்ற சமையல் குறிப்புக்கள் பற்றிய வலைத்தளத்துக்கு 2009 இல் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது தாயாரின் சமையல் குறிப்புகளை பட்டியல் இடும் முயற்சியாக இதை ஆரம்பித்தோம். இதோ கிட்டத்தட்ட 200 சமையல் குறிப்புகள் சேர்ந்து விட்டது. தினமும் சராசரியாக சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் உலகெங்கிலும் இருந்து இந்த வலைதளத்தை மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று google சொல்கிறது. ஏதோ விளையாட்டாக ஆரம்பித்தாலும் ஏகப்பட்ட உழைப்பை இதில் கொட்டி இருக்கிறோம் . இதற்காக எனது தாயாரையும் மனைவியையும் ரொம்பவே இம்சை படுத்தி இருக்கிறேன். இதே ஆர்வமும் உழைப்பும் 2010 லும் தொடருமானால் கண்டிப்பாக இது எனது தாயாருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கும். T.நகரில் யாராவது எனது தாயாரை அடையாளம் கண்டு கொண்டு .. "ஓ.. நீங்க தான் அந்த சுப்புஸ் கிட்சென் சுப்பு லக்ஷ்மியா ?" என்று விசாரிக்க கூடும். சைட் டிராபிக் எனப்படும் வலை மேய்வோர் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் எனக்கு சொற்ப வருமானமும் கிடைக்கும். 'மெனு ராணி' செல்லம் என்பது போல எதாவது ஒரு அடைமொழி எனது தாயாருக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நல்ல அடைமொழி உங்களுக்கு தோன்றினால் எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியபடுத்தவும். உங்களுக்கு சுப்பலக்ஷிமி கையால் விருந்து சாப்பிடும் அறிய வாய்ப்பு காத்து இருக்கிறது.

எனது மகள் இந்த வருடம் முதல் play school போய் வருகிறாள். அவளுடைய மழலை கேட்க ரொம்ப அழகாக இருக்கிறது. ர,ற இன்னும் வர மறுக்கிறது. "ஆம ஆம ஹஏ ஹஏ" (ராம ராம ஹரே ஹரே) என்று தான் சொல்கிறாள். அம்மா அவளுக்கு செய்வது அத்தனையும் அவள் தன் பொம்மைகளுக்கு பண்ணி இம்சை படுத்துகிறாள்.கேட்டால் Pretend பண்ணி விளையாடுகிறேன் என்று சிரிக்கிறாள். மிரட்டலுக்கு கொஞ்சமும் மசிய மறுக்கிறாள். அன்பாக சொன்னால் போனால் போகட்டும் என்று கேட்டு கொள்கிறாள். எதையும் உடனடியாக உள்வாங்கும் சக்தி இருப்பது தெரிகிறது. 2010 இல் அவளை ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும். Long live my baby !.

2008 டைரி குறிப்பில் எனது மாமனாரை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அதனால் 2009 லும் அவரை பற்றி குறிப்பிட்டாக வேண்டும். அதில் 2008 அவரை ரொம்பவே படுத்தி விட்டது என்று எழுதி இருந்தேன். 2009 அவர்களுக்கு மிக நல்ல வருடமாக தான் இருந்து இருக்க வேண்டும். 2008 இல் அவர்களை படுத்திய வாடகை காரனிடம் இருந்து விடுதலை வாங்கி கொண்டார்கள். பொண்ணும், பேத்தியும் அருகே வந்தார்கள். ஐரோப்பா (சூறாவளி) சுற்று பயணம் போய் வந்தார்கள். அடையாறில் ஒரு பிளாட் வாங்கினார்கள். சந்தோஷமும் துக்கமும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற உண்மையை எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

2009 இன் மற்ற முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்த்து விடுவோம். 2008 இன் பிற்பகுதியில் அமெரிக்காவில் ஆரம்பித்து உலகம் முழுதும் பற்றிக்கொண்ட Recession என்ற பொருளாதார நெருக்கடி கொஞ்சம் கொஞ்சமாக 2009 இல் விலக ஆரம்பித்தது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக பாரக் ஒபாமா பதவி ஏற்றுக்கொண்டார். ஆப்ரிக்கா அமெரிக்கர்கள் கூட்டம் கூடமாக இதை கொண்டாடினார்கள். பாப் பாடகர் மைக்கல் ஜாக்சன் மரணம் அடைந்தார். இந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து மன்கோகன் சிங்க் மீண்டும் பிரதமரானார். கலைஞர் அவரது வாரிசுகளுக்கு அமைச்சர் பதவி வாங்கி கொடுத்தார். இந்தியாவில் நேரு குடும்பத்துக்கு பிறகு குடும்ப அரசியலில் சக்கை போடு போடுவது கலைஞர் குடும்பம் தான். மு.க. ஸ்டாலின் பற்றி தின தந்தியில் செய்தி வராத நாளே இல்லை. அவரை பற்றி செய்தி எதுவும் இல்லை என்றாலும் "மு.க ஸ்டாலின் இன்று மெரினாவில் காலையில் நடந்தார்" என்ற செய்தி வந்தது. முதன் முறையாக எனக்கு வோட்டு போடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வழியாக கோலங்கள் இந்த வருட இறுதியில் முடிந்தது. தேவயானியின் ஒப்பாரியை பார்த்து பயந்து எனது மகள் "அம்மா இது நமக்கு வேண்டாம் மா" என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. கோலங்கள் முடிந்தால் என்ன இன்னும் ஒரு குத்து விளக்கு, மாங்கல்யம் என்று ஏதாவது ஒரு பெயரில் மெகா சீரியல் தொடர போகிறது. விடுதலை புலி தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுட்டு கொன்றது. நமது அரசியல் வாதிகள் இதை பற்றி சாமர்த்தியமாக கருத்து வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்தார்கள். கிரிக்கட்டில் சச்சின் தனது சாதனையில் புதிய மைல் கல் எட்டினார். என்ன செய்தும் இந்தியாவின் ஆதார பிரச்சனைகளான் லஞ்சம் ஊழல் கொஞ்சமும் குறைய வில்லை.

முடிந்தால் 2010இல் கீழே உள்ள பட்டியலை முயற்சி செய்து பாருங்கள்.
  1. தொலை காட்சி பார்க்கும் நேர்த்தி குறைத்து கொள்ள முயற்சி செயுங்கள். மெகா சீரியலை தவிர்த்து விடுங்கள். உடம்பிற்கும் மனதிற்கும் கொஞ்சமும் இது நல்லதல்ல.
  2. நல்ல புத்தகங்களை வாங்கி படித்து பாருங்கள்.
  3. குறைந்த பட்ச உடற்பயிற்சிக்கு தயாராகுங்கள். குறைந்தது அரை மணி நேர நடை அவசியம்.
  4. 2010 இல் நல்லதை யோசிப்போம், நல்லதை செய்வோம்.
2010 எல்லோருக்கும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள்.

சனி, 27 ஜூன், 2009

ஆடாத ஆட்டமெல்லாம் ...

சமீப காலமாக ஆப்ரிக்கா அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா கருப்பர்களில் (நல்ல உதை வாங்க போகிறேன்) மிகவும் பரவலாக பேசப்பட்டவர் யார் ? இந்த கேள்விக்கு உங்களுடைய பதில் பாரக் ஒபாமா என்றால்.. அது தவறு.. உங்களுக்கு சரவணா ஸ்டோர்ஸ் வழங்கும் சௌபாக்யா வெட் க்ரைண்டேர் பரிசு கிடையாது. சரியான விடை மைக்கல் ஜாக்சன்!!. மிகபெரும் பாப் இசை கலைஞரான இவர் ஒரு வாரத்திற்கு முன்பு (இன்றைய தேதி 4 ஜூலை 2009) தனது ஐம்பதாவது வயதில் காலமானார். சட்டன்று ஒட்டு மொத்த உலகுமும் இவருடைய பெயரை உச்சரித்து. BBC மற்றும் CNN இருபத்தி நாலு மணி நேரமும் மைக்கல் ஜாக்சன் பற்றி மட்டுமே உலகிற்கு சொன்னது. அவருடைய ரசிகர்கள் டிவியில் அழுதார்கள். பெரும்பாலோனோர் டிவிக்காக அழுவதாக நடித்தார்கள். ஹாலிவுட் முதல் பாலிவுட்வரை எல்லோரும் ஜாக்சன் இழப்பு ஒரு பேரிழப்பு என்றும் அது ஈடு செய்ய முடியாதது என்றும் சொன்னார்கள். நம்மூர் பிரபு தேவா ஒரு படி மேல போய் தன்னை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று மக்கள் கூறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக ஒரு பிட் போட்டார். ( இதை அவர் சொல்லும் போது அவர் பக்கத்தில் நயன் தாரா இருந்தாரா, இல்லையா என்பது இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாதது). ஆனால் என்னை ஒன்றும் இந்த செய்தி பெரிதாக பாதிக்க வில்லை. அவருடைய ஓரிரெண்டு பாடல்கள் எனக்கு பரிச்சயமே தவிர நான் ஒன்றும் அவருடைய தீவிர, ஏன் சாதாரண விசிறி கூட கிடையாது . இருந்தாலும் கடந்த ஒரு வார காலமாக டிவி, இன்டர்நெட், செய்தி தாள்கள் என்று எல்லா ஊடகங்களும் அவரது பெயரையே தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருந்ததால் ஒரு ஆர்வத்தில் அவரை பற்றி அறிந்து கொள்ள அவரை கூகிள் செய்தேன்

எனது சிறு வயது முதேலே நான் மைக்கல் ஜாக்சன் என்ற பெயரை கேள்வி பட்டு இருந்து இருக்கிறேன். எப்படி எனக்கு இந்த பெயர் பரிச்சயமானது என்று ஞயாபகம் இல்லை. எனக்கு மட்டும் அல்ல.. உங்களில் பலருக்கும் மைக்கல் ஜக்க்சனை பற்றிய பரிச்சியம் உங்களை அறியாமலேயே ஏற்பட்டு இருக்கலாம். நம்மவர்கள் யாராவது நடனமாடுவதை பார்த்தால், "ஆமாம்...பெரிய மைக்கல் ஜாக்சன்ன்னு நினைப்பு மனசுல.. ஆடரத பாரு.. " என்று நக்கல் செய்வதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். நடனம்.. அதுவும் மேற்கத்திய நடனம் என்றால் அது மைக்கல் ஜாக்சன் தான் என்ற பெயர் நிலைத்து விட்டது. நம்மூர் முனியம்மாவுக்கு கூட மைக்கல் ஜாக்சன் பற்றி தெரிந்து இருக்கிறது என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது தானே.

ஒரு ஏழ்மை குடும்பத்தில் ஏழாவது குழந்தயாக பிறந்தார் ஜாக்சன். சிறுவயதில் தனது தந்தையால் மிகவும் கொடுமை படுத்தப்பட்டு இருக்கிறார். பின்னாளில் இதை ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் சொல்லும் போது பெரிதாக அழுது இருக்கிறார். அவரது சகோதரர்களுடன் ஜாக்சன்5 என்ற குழு அமைத்து தனது ஏழு வயது முதேலே ஆடி பாட ஆரம்பித்து விட்டார். 1982 இல் இவருடைய "த்ரில்லேர்" என்ற ஆல்பெம் இவரை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதனுடைய ஆல்பம் விற்பனை இன்றளவும் ஒரு உலக சாதனையாக இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் மக்கள் ஜாக்சன் காசட்டுகளை ஒரு பொழுது போக்கு சாதனமாக சாதனமாக வாங்குவதை விட்டு, ஒரு வீட்டு உபயோக சாதனமாக வாங்க ஆரம்பித்தார்கள். ஒரு வீடு என்று இருந்தால் அதில் சில ஜாக்சன் காசெட்டுகள் இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகி விட்டது. அடுத்தடுத்த இவரது ஆல்பம் அதனையும் மிக பெரிய ஹிட். இன்றளவும் மிக அதிகமாக ஆல்பம் விற்பனையில் ராயல்டி வாங்கியது இவர் தானம்.

துள்ள வைக்கும் பாப் இசையுடன் இவரது கடினமான அங்க அசைவுகளுடன் கூடிய நடனம் தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது. இவரது மூன் வாக் மற்றும் ரோபோட் நடனம் மிகவும் உலக பிரசித்தி. பல கின்னஸ் சாதனைகள், 13கிராமி விருதுகள், என்று பல விருதுகள் இவரை தேடி வந்தன. இவரது ஆல்பம் விற்பனை மட்டும் 750 மில்லியன்.

இப்படி ஒரு பக்கம் அவரது சாதனைகள் ஒரு பக்கம் குவிந்தாலும் மறு பக்கம் அவரது திட்டமிட படாத ஆடம்பரம் இவரை மிகபெரும் கடனாளியாகவே வைத்திருந்தது. ஊடகங்கள் இவரை துரத்தி கொண்டே இருந்தன. இவரது ஒவ்வரு செயல்களுக்கும் ஊடகங்களால் ஒரு கதை பின்ன பட்டு பரபரப்பாக பேசப்பட்டது. உண்மையில் இவருக்கு ஒரு வகையான தோல் சம்பத்தப்பட்ட வியாதியின் காரணமாகவே அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார். அனால் இந்த மீடியாக்கள் இதற்க்கு பலவிதமான காரணங்களை உலகத்திற்கு சொன்னது. மீடியா இவரை ஒரு பக்கம் துரத்தினாலும், மறுபக்கம் இவரே துரத்தி துரத்தி சென்று பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டார். பதிமூன்று வயது சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மிகப்பெரும் தொகையை ($22 மில்லியன்) அந்த சிறுவனின் குடும்பத்துக்கும் கொடுத்து நீதி மன்ற விசாரணைகளில் இருந்து தப்பித்தார். இது போல் பல சர்ச்சைகளில் மாடிக்கொண்டர். யானை மனிதனின் (!?) எலும்பை உடன் வைத்து இருந்தது, வயதை குறைப்பதற்க்காக ஏதோ ஒரு சேம்பரில் படுத்துக்கொண்டு இருந்தது, குரங்கு வளர்த்தது, என்று பற்பல சர்ச்சைகளில் மாடிக்கொண்டர். இவற்றில் பலவற்றை அவர் மறுத்தாலும் ஏதோ நெருப்பு இல்லாமல் புகை வருமா ? ஆனாலும் மீடியாக்கள் இவரை படாது பாடு படுத்தின. ஜாக்சன் மிகவும் நொந்து போய் ........
"Why not just tell people I'm an alien from Mars. Tell them I eat live chickens and do a voodoo dance at midnight. They'll believe anything you say, because you're a reporter. But if I, Michael Jackson, were to say, "I'm an alien from Mars and I eat live chickens and do a voodoo dance at midnight," people would say, "Oh, man, that Michael Jackson is nuts. He's cracked up. You can't believe a damn word that comes out of his mouth."—Michael Jackson

ஒரு பக்கம் இவர் சர்ச்சைகளிலும், ஏகப்பட்ட கடனில் சிக்கி தவித்தாலும் இவர் பல்வேறு சேவை மையங்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார். கிட்டத்தட்ட நாற்பதிற்கும் மேற்பட்ட சேவை மையங்களுக்கு பல மில்லியன் டாலர்களை நன்கொடை தந்து இருப்பது இவரது சேவை மனப்பான்மையை காட்டுகிறது.

பல உடல் உபாதைகள், பிளாஸ்டிக் சர்ஜெரி மூலம் முகத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டது, 1993 இல் சிறுவனிடம் பாலியல் பலாத்காரம்- அதற்கான நழ்ட ஈடு, இரண்டு திருமணங்கள் - மூன்று குழந்தைகள், மீண்டும் 2005 இல் பாலியல் பலாத்கார புகார்கள் , ஏகப்பட்ட கடன் நெருக்கடிகள் எல்லாம் சேர்ந்து அவரை ஒரு நல்ல நாளாக பார்த்து உலகத்தை விட்டு அனுப்பி வைத்தது. அவர் இறக்கும் போது மிகப்பெரும் கடனாளியாக ஒரு வாடகை வீட்டில் தான் இறந்தார்.

உலகில் வெகு சிலரே ஒரு கலையை உலகத்திடம் கொண்டு போய் சேற்ற பெருமைக்கு உள்ளானவர்கள். ப்ரூஸ் லீ எப்படி கராத்தே, குன் பூ போன்ற கலைகளை உலகம் முழுதும் பரிச்சிய படுத்தினாரோ அதே போல் பாப் இசையை உலகம் முழுதும் கொண்டு சென்று சேற்ற பெருமை மைக்கல் ஜாக்சனை தான் சேரும். எப்படி உலகம் சார்லி சாப்ளின், ப்ரூஸ் லீ போன்றவர்களை மறக்கதோ அதே போல் உலகம் மைக்கல் ஜக்கனையும் மறக்காது.

மைக்கல் ஜாக்சன் வாழ்வின் மிக உன்னதமான தருணங்களையும், மிக மோசமான தருணங்களையும் ஒரு சேர அனுபவித்தார் என்றே தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?

ஞாயிறு, 21 ஜூன், 2009

கதை எழுத போறேன்!

சார், என் பேர் வெங்கடாசலம். பேர் கேட்டுட்டு இவன் ஏதோ பழய காலத்து ஆளுன்னு சட்டுன்னு ஒரு முடிவிக்கு வந்துட கூடாது. எங்க தாத்தா பேர எனக்கு வச்சுட்டாரு எங்க அப்பா. மத்தபடி நான் இந்த காலத்து ஆளுங்க சார், நம்புங்க. சொந்த ஊரு நாகர்கோயில். ஆனால் உங்கள்ள பல பேரு மாதிரி மெட்ராஸ் வந்து செட்டில் ஆகி ஒரு பத்து வருழம் ஆச்சுங்க. ஒரு IT கம்பெனில வேலை செய்யறேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். இங்க பாருங்க சார், நான் இங்க என் சொந்த கதைய சொல்ல வரல. ஒரு முக்கியமான மேட்டர பத்தி உங்க கிட்ட பேசலாமுன்னு வந்து இருக்கேன். முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க சார்.

இந்த காலத்துல வெகு ஜன எழுத்தாளர்கள் ரொம்ப கம்மிங்கறது என் அபிப்பிராயம் சார். மக்கள் விரும்பி படிக்கற எழுத்தாளர்கள் யாரு சார் இப்போ இருக்காங்க.? விரல் விட்டு எண்ணிடலாம். அந்த காலத்துல (ஆரம்பிசிடான்யா) கல்கி, சாவி, தி.ஜானகிராமன் அப்படின்னு ஒரு பெரிய பட்டாளமே இருந்தது. எழுத்தால ஒரு ராஜ பாட்டையை போட்டு வச்சு இருந்தாங்க. இப்போ யாரு சார் இருக்காங்க ? சுஜாதானு ஒரு புண்ணியவான் இருந்தாரு. அவரும் போயி சேந்துட்டாரு. அதுக்காக நான் இப்போ எழுத்தாளர்களே இல்லன்னு சொல்ல வரல. நான் இங்க பேசறது வெகுஜன எழுத்தாளர்கள பத்தி மட்டும் தான். இலக்கியம் அப்படிங்கற போர்வையில சில எழுத்தாளர்கள் இருக்காங்க சார். ஆனா யாருக்கு அவங்க எழுதறது புரியறது.? எஸ்.ராமகிருஷ்ணன் அப்படின்னு ஒரு எழுத்தாளர் இப்போ எழுதறார். ரொம்ப அருமையா தான் எழுதறாரு. ஆனா புரிய தான் மாட்டேன்கிறது. "இரவு அடையாளம் அழிந்து போன நதி. அதன் சீற்றம் நாம் அறியாதது. துடுப்புகள் இல்லாமலே அதில் நாம் பயணம் செய்ய இயலும். பசுவின் காம்பிலிரிந்து பால் சொட்டிக்கொண்டிருப்பது போன்று பிரபஞ்கத்தின் காம்புகளில் இருந்து இரவு சொட்டி வடிந்து கொண்டேயிருக்கிறது..... ". உங்களுக்கு இதன் அர்த்தம் ஏதாவது புரிகிறதா? ஒவ்வரு வரியையும் குறைந்தது மூன்று முறை படித்தால் தான் சில தடவை கொஞ்சமாவது புரியுது. இன்னொரு எழுத்தாளர் இருக்கிறார் அவர் பெயர் ஜெயமோகன். இவருடைய எழுத்துக்களை நான் படித்தது இல்லை சார். ஏன்னா இந்த ஆள் ஒரு பெரிய சைக்கோநு கனிமொழி அம்மா ஒரு மீட்டிங்ல சொல்லி இருக்காங்க. மக்களுக்கு புரியற மாதிரி எழுதறதுக்கு இப்போ யாரும் இல்லைங்கறது என் அபிப்பிராயம் சார். வெகு ஜனத்தை போய் சேராத எதுவும் பெரிதாக ஜெயுக்க முடியாது. அதுக்காக நான் இலக்கியம் தப்புன்னு சொல்ல வரல சார். எனக்கு புரியல.. அவ்வளவு தான். கதை படிச்சா உடன மனசுல போய் ஒட்டிக்கணும். இன்னிக்கும் சுஜாதாவுடைய "நகரம்" அப்படிங்கற சிறுகதைய மக்கள் ஞாபகம் வச்சு இருக்காங்க சார். அறுபதுகளில் எழுதின கதை. இன்னிக்கும் அது பொருந்தும். இன்னிக்கும் மக்கள் கல்கி, சாவி எழுதின கதைகளை தேடி போய் படிக்கறாங்க.. இன்னிக்கு யாரு சார் அப்படி எழுதறாங்க ?

அதுக்காக நான் ஒட்டுமொத்தமா எழுத்தாளர்களை குத்தம் சொல்ல வரல சார். படிக்கறவங்க கொறஞ்சு போய்ட்டாங்க. அதையும் நாம ஒதுக்கணும் சார். எத்தனை தமிழ் குழந்தைகள் "தமிழ் எனக்கு பேச தான் தெரியும்.. கதை எல்லாம் எனக்கு புரியாது.. எழுத்து கூட்டி படிக்க ரொம்ப நேரம் ஆகும்... ஹார்ரி போட்டேர் தான் எனக்கு பிடிச்ச புக்" அப்படின்னு சொல்ல நீங்க கேட்டு இருக்கீங்க.? இப்படி நமது தலை முறை டிவி, ஆங்கில நாவல்கள் அப்படின்னு மாறிகிட்டு இருக்கும்போது நாமளும் ரொம்ப இலக்கிய தரமான நாவல்களை எழுதின அவங்க எப்படி சார் படிப்பாங்க. ?

நான் முன்னமே சொன்ன மாதிரி கதை எளிதாக இருக்கணும் சார். அதில் கொஞ்சம் நகைசுவை இருக்கணும். அதற்குள் ஒரு கருத்து இருக்கணும். அப்போ தான் அது மக்களை போய் சேரும்.. என்ன சார் சொல்றீங்க நீங்க ? இதை ஏன் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க. ? பொன்னியின் செல்வன் மொத்தம் ஐந்து பாகம். 3000 பக்கங்களுக்கு மேல். இன்னிக்கு ஐந்தாவது தலைமுறை தேடி போய் படிக்குது. கதை நா இப்படி இருக்க வேண்டாமா சார்.

இப்போ தான் எனக்கு சர்ச்சில் சொன்னது ஞாபககுக்கு வருது சார். "நாடு என்ன உனக்கு பண்ணினது கேக்காத டா.. டுபுக்கு.. நீ ஏதாவது பண்ணுடா நாட்டுக்கு மொதேல்ல". ரொம்ப ஞாயமான கேள்வி சார் இது. போயும் போயும் இப்போ தான் எனக்கு இது ஞாபககுக்கு வரணுமா? ஆனா வந்துருச்சே ... அது தான் சார்.. நான் இந்த முடிவுக்கு வந்துட்டேன். ஆமாம் சார்... நானே கதை எழுதலாம்னு முடிவுக்கு வந்துட்டேன். சார்.. சிரிக்காதீங்க சார். நான் எழுதினா யாரு புப்ளிஷ் பண்ணுவாங்கனு கேக்கறீங்களா? யாரும் பண்ண வேணாம். எனக்கு ஒரு blogஇருக்கு. அதுல நானே புப்ளிஷ் பண்ணிப்பேன். நாலு பேருக்கு மெயில் அனுப்பி torture பண்ணி படிக்க வச்சுடுவேன். ஒரு படி மேல போய் அவங்கள கமெண்ட் கூட போஸ்ட் பண்ண வச்சுடுவேன் . அது ஒரு பெரிய மேட்டர் இல்ல. இப்படி சிரிக்காதீங்க சார். ப்ளீஸ். ஒரு வளர எழுத்தாளன அதுவும் ஒரு வெகு ஜன எழுத்தாளன மட்டம் தட்டாதீங்க சார். நல்ல இருப்பேங்க. நீங்க தட்டி கொடுக்கலைனா கூட பரவ இல்ல சார். இத மாதிரி கேவலமா சிரிக்காதீங்க. போய் என் blog படிச்சு பாருங்க சார். அதுல உள்ள கமெண்ட்ஸ் படிங்க. என் நண்பன் ஒருத்தன் படிச்சிட்டு.. "ரொம்ப நல்ல எழுதறடா. நீ ஏன் "கதை சொல்லிகள்" கிளுப்ள சேர கூடாதுன்னு கேட்டான் சார்.

இவர விடுங்க சார்.. சிரித்தவர் வாழ்ந்ததில்லை சரித்தரம் சொல்கிறது. நான் எங்க விட்டேன் ... ஆங்.. நான் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. ஆமா சார். உங்கள மாதிரி ஒரு இரண்டு பேர் படிச்சா கூட போதும். இப்போ நானும் எழுதறத விட்டுட்டேன்னா அப்புறம் யாரு சார் வெகு ஜனம் படிக்கற மாதிரி கதை எழுதறது. அதுனால கதை எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. கடந்த ரெண்டு வாரமா ரொம்ப யோசிக்கறேன்.. எத பத்தி கதை எழுதலாம்னு. கதைக்கு ஒரு கரு வேணும். முன்னமே சொன்ன மாதிரி கொஞ்சம் ஹாஸ்யம் வேணும்.. அப்புறம் சொல்லவந்த கருத்த வாழ பழத்துல ஊசிய சொருகற மாதிரி மெதுவா சொல்லணும். எல்லாம் ரெடி சார். ஆனா கதைக்கு கரு மட்டும் இது வரைக்கும் எனக்கு செட் ஆகல. எத யோசிச்சாலும் அத இதுக்கு முன்னாடி யாரோ எழுதி இருக்காங்க. நானும் ரொம்ப யோசிச்சு பாக்கறேன் .. ஒன்னும் செட் ஆகா மாட்டேங்கது. இத பாருங்க சார்.. இலக்கியம்.. அப்படின்னு வந்துட்ட.. அது வேற மாதிரி.. புகுந்து விளயடிடலாம். வெகு ஜன கதை பாருங்க .. அது தான் சார்.. கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கு.

சார்.. இவ்வளவு நேரம் இத பொறுமையா படிச்சதுக்கு நன்றி. என்னுடைய குறிக்கோள் என்னனு தெளிவா சொல்லிட்டேன் உங்க கிட்ட. உங்க கிட்ட ஏதாவது கதை கரு இருந்ததுனா கொஞ்சம் சொல்லுங்க சார். புகுந்து விளையாடிடலாம். நாம தான் இந்த வெகு ஜனங்களுக்கும், தமிழுக்கும் ஏதாவது பண்ணனும். என்ன சார் சொல்றீங்க நீங்க ?