சனி, 27 ஜூன், 2009

ஆடாத ஆட்டமெல்லாம் ...

சமீப காலமாக ஆப்ரிக்கா அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா கருப்பர்களில் (நல்ல உதை வாங்க போகிறேன்) மிகவும் பரவலாக பேசப்பட்டவர் யார் ? இந்த கேள்விக்கு உங்களுடைய பதில் பாரக் ஒபாமா என்றால்.. அது தவறு.. உங்களுக்கு சரவணா ஸ்டோர்ஸ் வழங்கும் சௌபாக்யா வெட் க்ரைண்டேர் பரிசு கிடையாது. சரியான விடை மைக்கல் ஜாக்சன்!!. மிகபெரும் பாப் இசை கலைஞரான இவர் ஒரு வாரத்திற்கு முன்பு (இன்றைய தேதி 4 ஜூலை 2009) தனது ஐம்பதாவது வயதில் காலமானார். சட்டன்று ஒட்டு மொத்த உலகுமும் இவருடைய பெயரை உச்சரித்து. BBC மற்றும் CNN இருபத்தி நாலு மணி நேரமும் மைக்கல் ஜாக்சன் பற்றி மட்டுமே உலகிற்கு சொன்னது. அவருடைய ரசிகர்கள் டிவியில் அழுதார்கள். பெரும்பாலோனோர் டிவிக்காக அழுவதாக நடித்தார்கள். ஹாலிவுட் முதல் பாலிவுட்வரை எல்லோரும் ஜாக்சன் இழப்பு ஒரு பேரிழப்பு என்றும் அது ஈடு செய்ய முடியாதது என்றும் சொன்னார்கள். நம்மூர் பிரபு தேவா ஒரு படி மேல போய் தன்னை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று மக்கள் கூறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக ஒரு பிட் போட்டார். ( இதை அவர் சொல்லும் போது அவர் பக்கத்தில் நயன் தாரா இருந்தாரா, இல்லையா என்பது இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாதது). ஆனால் என்னை ஒன்றும் இந்த செய்தி பெரிதாக பாதிக்க வில்லை. அவருடைய ஓரிரெண்டு பாடல்கள் எனக்கு பரிச்சயமே தவிர நான் ஒன்றும் அவருடைய தீவிர, ஏன் சாதாரண விசிறி கூட கிடையாது . இருந்தாலும் கடந்த ஒரு வார காலமாக டிவி, இன்டர்நெட், செய்தி தாள்கள் என்று எல்லா ஊடகங்களும் அவரது பெயரையே தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருந்ததால் ஒரு ஆர்வத்தில் அவரை பற்றி அறிந்து கொள்ள அவரை கூகிள் செய்தேன்

எனது சிறு வயது முதேலே நான் மைக்கல் ஜாக்சன் என்ற பெயரை கேள்வி பட்டு இருந்து இருக்கிறேன். எப்படி எனக்கு இந்த பெயர் பரிச்சயமானது என்று ஞயாபகம் இல்லை. எனக்கு மட்டும் அல்ல.. உங்களில் பலருக்கும் மைக்கல் ஜக்க்சனை பற்றிய பரிச்சியம் உங்களை அறியாமலேயே ஏற்பட்டு இருக்கலாம். நம்மவர்கள் யாராவது நடனமாடுவதை பார்த்தால், "ஆமாம்...பெரிய மைக்கல் ஜாக்சன்ன்னு நினைப்பு மனசுல.. ஆடரத பாரு.. " என்று நக்கல் செய்வதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். நடனம்.. அதுவும் மேற்கத்திய நடனம் என்றால் அது மைக்கல் ஜாக்சன் தான் என்ற பெயர் நிலைத்து விட்டது. நம்மூர் முனியம்மாவுக்கு கூட மைக்கல் ஜாக்சன் பற்றி தெரிந்து இருக்கிறது என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது தானே.

ஒரு ஏழ்மை குடும்பத்தில் ஏழாவது குழந்தயாக பிறந்தார் ஜாக்சன். சிறுவயதில் தனது தந்தையால் மிகவும் கொடுமை படுத்தப்பட்டு இருக்கிறார். பின்னாளில் இதை ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் சொல்லும் போது பெரிதாக அழுது இருக்கிறார். அவரது சகோதரர்களுடன் ஜாக்சன்5 என்ற குழு அமைத்து தனது ஏழு வயது முதேலே ஆடி பாட ஆரம்பித்து விட்டார். 1982 இல் இவருடைய "த்ரில்லேர்" என்ற ஆல்பெம் இவரை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதனுடைய ஆல்பம் விற்பனை இன்றளவும் ஒரு உலக சாதனையாக இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் மக்கள் ஜாக்சன் காசட்டுகளை ஒரு பொழுது போக்கு சாதனமாக சாதனமாக வாங்குவதை விட்டு, ஒரு வீட்டு உபயோக சாதனமாக வாங்க ஆரம்பித்தார்கள். ஒரு வீடு என்று இருந்தால் அதில் சில ஜாக்சன் காசெட்டுகள் இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகி விட்டது. அடுத்தடுத்த இவரது ஆல்பம் அதனையும் மிக பெரிய ஹிட். இன்றளவும் மிக அதிகமாக ஆல்பம் விற்பனையில் ராயல்டி வாங்கியது இவர் தானம்.

துள்ள வைக்கும் பாப் இசையுடன் இவரது கடினமான அங்க அசைவுகளுடன் கூடிய நடனம் தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது. இவரது மூன் வாக் மற்றும் ரோபோட் நடனம் மிகவும் உலக பிரசித்தி. பல கின்னஸ் சாதனைகள், 13கிராமி விருதுகள், என்று பல விருதுகள் இவரை தேடி வந்தன. இவரது ஆல்பம் விற்பனை மட்டும் 750 மில்லியன்.

இப்படி ஒரு பக்கம் அவரது சாதனைகள் ஒரு பக்கம் குவிந்தாலும் மறு பக்கம் அவரது திட்டமிட படாத ஆடம்பரம் இவரை மிகபெரும் கடனாளியாகவே வைத்திருந்தது. ஊடகங்கள் இவரை துரத்தி கொண்டே இருந்தன. இவரது ஒவ்வரு செயல்களுக்கும் ஊடகங்களால் ஒரு கதை பின்ன பட்டு பரபரப்பாக பேசப்பட்டது. உண்மையில் இவருக்கு ஒரு வகையான தோல் சம்பத்தப்பட்ட வியாதியின் காரணமாகவே அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார். அனால் இந்த மீடியாக்கள் இதற்க்கு பலவிதமான காரணங்களை உலகத்திற்கு சொன்னது. மீடியா இவரை ஒரு பக்கம் துரத்தினாலும், மறுபக்கம் இவரே துரத்தி துரத்தி சென்று பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டார். பதிமூன்று வயது சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மிகப்பெரும் தொகையை ($22 மில்லியன்) அந்த சிறுவனின் குடும்பத்துக்கும் கொடுத்து நீதி மன்ற விசாரணைகளில் இருந்து தப்பித்தார். இது போல் பல சர்ச்சைகளில் மாடிக்கொண்டர். யானை மனிதனின் (!?) எலும்பை உடன் வைத்து இருந்தது, வயதை குறைப்பதற்க்காக ஏதோ ஒரு சேம்பரில் படுத்துக்கொண்டு இருந்தது, குரங்கு வளர்த்தது, என்று பற்பல சர்ச்சைகளில் மாடிக்கொண்டர். இவற்றில் பலவற்றை அவர் மறுத்தாலும் ஏதோ நெருப்பு இல்லாமல் புகை வருமா ? ஆனாலும் மீடியாக்கள் இவரை படாது பாடு படுத்தின. ஜாக்சன் மிகவும் நொந்து போய் ........
"Why not just tell people I'm an alien from Mars. Tell them I eat live chickens and do a voodoo dance at midnight. They'll believe anything you say, because you're a reporter. But if I, Michael Jackson, were to say, "I'm an alien from Mars and I eat live chickens and do a voodoo dance at midnight," people would say, "Oh, man, that Michael Jackson is nuts. He's cracked up. You can't believe a damn word that comes out of his mouth."—Michael Jackson

ஒரு பக்கம் இவர் சர்ச்சைகளிலும், ஏகப்பட்ட கடனில் சிக்கி தவித்தாலும் இவர் பல்வேறு சேவை மையங்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார். கிட்டத்தட்ட நாற்பதிற்கும் மேற்பட்ட சேவை மையங்களுக்கு பல மில்லியன் டாலர்களை நன்கொடை தந்து இருப்பது இவரது சேவை மனப்பான்மையை காட்டுகிறது.

பல உடல் உபாதைகள், பிளாஸ்டிக் சர்ஜெரி மூலம் முகத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டது, 1993 இல் சிறுவனிடம் பாலியல் பலாத்காரம்- அதற்கான நழ்ட ஈடு, இரண்டு திருமணங்கள் - மூன்று குழந்தைகள், மீண்டும் 2005 இல் பாலியல் பலாத்கார புகார்கள் , ஏகப்பட்ட கடன் நெருக்கடிகள் எல்லாம் சேர்ந்து அவரை ஒரு நல்ல நாளாக பார்த்து உலகத்தை விட்டு அனுப்பி வைத்தது. அவர் இறக்கும் போது மிகப்பெரும் கடனாளியாக ஒரு வாடகை வீட்டில் தான் இறந்தார்.

உலகில் வெகு சிலரே ஒரு கலையை உலகத்திடம் கொண்டு போய் சேற்ற பெருமைக்கு உள்ளானவர்கள். ப்ரூஸ் லீ எப்படி கராத்தே, குன் பூ போன்ற கலைகளை உலகம் முழுதும் பரிச்சிய படுத்தினாரோ அதே போல் பாப் இசையை உலகம் முழுதும் கொண்டு சென்று சேற்ற பெருமை மைக்கல் ஜாக்சனை தான் சேரும். எப்படி உலகம் சார்லி சாப்ளின், ப்ரூஸ் லீ போன்றவர்களை மறக்கதோ அதே போல் உலகம் மைக்கல் ஜக்கனையும் மறக்காது.

மைக்கல் ஜாக்சன் வாழ்வின் மிக உன்னதமான தருணங்களையும், மிக மோசமான தருணங்களையும் ஒரு சேர அனுபவித்தார் என்றே தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?

ஞாயிறு, 21 ஜூன், 2009

கதை எழுத போறேன்!

சார், என் பேர் வெங்கடாசலம். பேர் கேட்டுட்டு இவன் ஏதோ பழய காலத்து ஆளுன்னு சட்டுன்னு ஒரு முடிவிக்கு வந்துட கூடாது. எங்க தாத்தா பேர எனக்கு வச்சுட்டாரு எங்க அப்பா. மத்தபடி நான் இந்த காலத்து ஆளுங்க சார், நம்புங்க. சொந்த ஊரு நாகர்கோயில். ஆனால் உங்கள்ள பல பேரு மாதிரி மெட்ராஸ் வந்து செட்டில் ஆகி ஒரு பத்து வருழம் ஆச்சுங்க. ஒரு IT கம்பெனில வேலை செய்யறேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். இங்க பாருங்க சார், நான் இங்க என் சொந்த கதைய சொல்ல வரல. ஒரு முக்கியமான மேட்டர பத்தி உங்க கிட்ட பேசலாமுன்னு வந்து இருக்கேன். முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க சார்.

இந்த காலத்துல வெகு ஜன எழுத்தாளர்கள் ரொம்ப கம்மிங்கறது என் அபிப்பிராயம் சார். மக்கள் விரும்பி படிக்கற எழுத்தாளர்கள் யாரு சார் இப்போ இருக்காங்க.? விரல் விட்டு எண்ணிடலாம். அந்த காலத்துல (ஆரம்பிசிடான்யா) கல்கி, சாவி, தி.ஜானகிராமன் அப்படின்னு ஒரு பெரிய பட்டாளமே இருந்தது. எழுத்தால ஒரு ராஜ பாட்டையை போட்டு வச்சு இருந்தாங்க. இப்போ யாரு சார் இருக்காங்க ? சுஜாதானு ஒரு புண்ணியவான் இருந்தாரு. அவரும் போயி சேந்துட்டாரு. அதுக்காக நான் இப்போ எழுத்தாளர்களே இல்லன்னு சொல்ல வரல. நான் இங்க பேசறது வெகுஜன எழுத்தாளர்கள பத்தி மட்டும் தான். இலக்கியம் அப்படிங்கற போர்வையில சில எழுத்தாளர்கள் இருக்காங்க சார். ஆனா யாருக்கு அவங்க எழுதறது புரியறது.? எஸ்.ராமகிருஷ்ணன் அப்படின்னு ஒரு எழுத்தாளர் இப்போ எழுதறார். ரொம்ப அருமையா தான் எழுதறாரு. ஆனா புரிய தான் மாட்டேன்கிறது. "இரவு அடையாளம் அழிந்து போன நதி. அதன் சீற்றம் நாம் அறியாதது. துடுப்புகள் இல்லாமலே அதில் நாம் பயணம் செய்ய இயலும். பசுவின் காம்பிலிரிந்து பால் சொட்டிக்கொண்டிருப்பது போன்று பிரபஞ்கத்தின் காம்புகளில் இருந்து இரவு சொட்டி வடிந்து கொண்டேயிருக்கிறது..... ". உங்களுக்கு இதன் அர்த்தம் ஏதாவது புரிகிறதா? ஒவ்வரு வரியையும் குறைந்தது மூன்று முறை படித்தால் தான் சில தடவை கொஞ்சமாவது புரியுது. இன்னொரு எழுத்தாளர் இருக்கிறார் அவர் பெயர் ஜெயமோகன். இவருடைய எழுத்துக்களை நான் படித்தது இல்லை சார். ஏன்னா இந்த ஆள் ஒரு பெரிய சைக்கோநு கனிமொழி அம்மா ஒரு மீட்டிங்ல சொல்லி இருக்காங்க. மக்களுக்கு புரியற மாதிரி எழுதறதுக்கு இப்போ யாரும் இல்லைங்கறது என் அபிப்பிராயம் சார். வெகு ஜனத்தை போய் சேராத எதுவும் பெரிதாக ஜெயுக்க முடியாது. அதுக்காக நான் இலக்கியம் தப்புன்னு சொல்ல வரல சார். எனக்கு புரியல.. அவ்வளவு தான். கதை படிச்சா உடன மனசுல போய் ஒட்டிக்கணும். இன்னிக்கும் சுஜாதாவுடைய "நகரம்" அப்படிங்கற சிறுகதைய மக்கள் ஞாபகம் வச்சு இருக்காங்க சார். அறுபதுகளில் எழுதின கதை. இன்னிக்கும் அது பொருந்தும். இன்னிக்கும் மக்கள் கல்கி, சாவி எழுதின கதைகளை தேடி போய் படிக்கறாங்க.. இன்னிக்கு யாரு சார் அப்படி எழுதறாங்க ?

அதுக்காக நான் ஒட்டுமொத்தமா எழுத்தாளர்களை குத்தம் சொல்ல வரல சார். படிக்கறவங்க கொறஞ்சு போய்ட்டாங்க. அதையும் நாம ஒதுக்கணும் சார். எத்தனை தமிழ் குழந்தைகள் "தமிழ் எனக்கு பேச தான் தெரியும்.. கதை எல்லாம் எனக்கு புரியாது.. எழுத்து கூட்டி படிக்க ரொம்ப நேரம் ஆகும்... ஹார்ரி போட்டேர் தான் எனக்கு பிடிச்ச புக்" அப்படின்னு சொல்ல நீங்க கேட்டு இருக்கீங்க.? இப்படி நமது தலை முறை டிவி, ஆங்கில நாவல்கள் அப்படின்னு மாறிகிட்டு இருக்கும்போது நாமளும் ரொம்ப இலக்கிய தரமான நாவல்களை எழுதின அவங்க எப்படி சார் படிப்பாங்க. ?

நான் முன்னமே சொன்ன மாதிரி கதை எளிதாக இருக்கணும் சார். அதில் கொஞ்சம் நகைசுவை இருக்கணும். அதற்குள் ஒரு கருத்து இருக்கணும். அப்போ தான் அது மக்களை போய் சேரும்.. என்ன சார் சொல்றீங்க நீங்க ? இதை ஏன் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க. ? பொன்னியின் செல்வன் மொத்தம் ஐந்து பாகம். 3000 பக்கங்களுக்கு மேல். இன்னிக்கு ஐந்தாவது தலைமுறை தேடி போய் படிக்குது. கதை நா இப்படி இருக்க வேண்டாமா சார்.

இப்போ தான் எனக்கு சர்ச்சில் சொன்னது ஞாபககுக்கு வருது சார். "நாடு என்ன உனக்கு பண்ணினது கேக்காத டா.. டுபுக்கு.. நீ ஏதாவது பண்ணுடா நாட்டுக்கு மொதேல்ல". ரொம்ப ஞாயமான கேள்வி சார் இது. போயும் போயும் இப்போ தான் எனக்கு இது ஞாபககுக்கு வரணுமா? ஆனா வந்துருச்சே ... அது தான் சார்.. நான் இந்த முடிவுக்கு வந்துட்டேன். ஆமாம் சார்... நானே கதை எழுதலாம்னு முடிவுக்கு வந்துட்டேன். சார்.. சிரிக்காதீங்க சார். நான் எழுதினா யாரு புப்ளிஷ் பண்ணுவாங்கனு கேக்கறீங்களா? யாரும் பண்ண வேணாம். எனக்கு ஒரு blogஇருக்கு. அதுல நானே புப்ளிஷ் பண்ணிப்பேன். நாலு பேருக்கு மெயில் அனுப்பி torture பண்ணி படிக்க வச்சுடுவேன். ஒரு படி மேல போய் அவங்கள கமெண்ட் கூட போஸ்ட் பண்ண வச்சுடுவேன் . அது ஒரு பெரிய மேட்டர் இல்ல. இப்படி சிரிக்காதீங்க சார். ப்ளீஸ். ஒரு வளர எழுத்தாளன அதுவும் ஒரு வெகு ஜன எழுத்தாளன மட்டம் தட்டாதீங்க சார். நல்ல இருப்பேங்க. நீங்க தட்டி கொடுக்கலைனா கூட பரவ இல்ல சார். இத மாதிரி கேவலமா சிரிக்காதீங்க. போய் என் blog படிச்சு பாருங்க சார். அதுல உள்ள கமெண்ட்ஸ் படிங்க. என் நண்பன் ஒருத்தன் படிச்சிட்டு.. "ரொம்ப நல்ல எழுதறடா. நீ ஏன் "கதை சொல்லிகள்" கிளுப்ள சேர கூடாதுன்னு கேட்டான் சார்.

இவர விடுங்க சார்.. சிரித்தவர் வாழ்ந்ததில்லை சரித்தரம் சொல்கிறது. நான் எங்க விட்டேன் ... ஆங்.. நான் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. ஆமா சார். உங்கள மாதிரி ஒரு இரண்டு பேர் படிச்சா கூட போதும். இப்போ நானும் எழுதறத விட்டுட்டேன்னா அப்புறம் யாரு சார் வெகு ஜனம் படிக்கற மாதிரி கதை எழுதறது. அதுனால கதை எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. கடந்த ரெண்டு வாரமா ரொம்ப யோசிக்கறேன்.. எத பத்தி கதை எழுதலாம்னு. கதைக்கு ஒரு கரு வேணும். முன்னமே சொன்ன மாதிரி கொஞ்சம் ஹாஸ்யம் வேணும்.. அப்புறம் சொல்லவந்த கருத்த வாழ பழத்துல ஊசிய சொருகற மாதிரி மெதுவா சொல்லணும். எல்லாம் ரெடி சார். ஆனா கதைக்கு கரு மட்டும் இது வரைக்கும் எனக்கு செட் ஆகல. எத யோசிச்சாலும் அத இதுக்கு முன்னாடி யாரோ எழுதி இருக்காங்க. நானும் ரொம்ப யோசிச்சு பாக்கறேன் .. ஒன்னும் செட் ஆகா மாட்டேங்கது. இத பாருங்க சார்.. இலக்கியம்.. அப்படின்னு வந்துட்ட.. அது வேற மாதிரி.. புகுந்து விளயடிடலாம். வெகு ஜன கதை பாருங்க .. அது தான் சார்.. கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கு.

சார்.. இவ்வளவு நேரம் இத பொறுமையா படிச்சதுக்கு நன்றி. என்னுடைய குறிக்கோள் என்னனு தெளிவா சொல்லிட்டேன் உங்க கிட்ட. உங்க கிட்ட ஏதாவது கதை கரு இருந்ததுனா கொஞ்சம் சொல்லுங்க சார். புகுந்து விளையாடிடலாம். நாம தான் இந்த வெகு ஜனங்களுக்கும், தமிழுக்கும் ஏதாவது பண்ணனும். என்ன சார் சொல்றீங்க நீங்க ?