சனி, 18 ஏப்ரல், 2009

எனது மேல்நிலை பருவம்

இந்த கட்டுரையை நான் எனது ஆசிரியர்களுக்கு பாத காணிக்கை ஆக்குகிறேன். !!

ஐந்தாம் வகுப்பு வரை அரசு தொடக்க பள்ளி, ஆசிராமத்தில் படித்து வந்த நான் ஆறாம் வகுப்புக்காக சுசீந்தரம் S.M.S.M. மேல் நிலை பள்ளிக்கு சென்றேன். அரசு தொடக்க பள்ளி எனது வீட்டில் இருந்து 50 m தொலைவு தான் இருக்கும். தண்ணீர் குடிக்க, சாப்பிட என்று ஒரு நாளைக்கு எப்படியும் மூன்று நான்கு தடவை வீடிற்கு வந்து விடுவேன். ஆனால் இந்த புதிய பள்ளி வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு இருக்கும். இந்த பள்ளி ஒரு மேல் நிலை பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இங்கு உண்டு. மிக பெரிய பள்ளி. 1000 மாணவர்களுக்கு மேல் படிக்கும் இடம். இங்கு அரசு தொடக்க பள்ளியில் கிடைத்த சலுகைகளை எதிர் பார்க்க முடியாது. வீட்டிற்கு மிக அருகில் உள்ள பள்ளிக்கு சென்று வந்த எனக்கு, வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்வது ஒரு புதிய அனுபவம். Uniform போட்டுக்கொள்ள வேண்டும் , கையில் சாப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும் , இப்படி பல புதிய அனுபவங்கள். இந்த புதிய அனுபவத்துக்கு தயாராவதற்கு முன்பே காஞ்சனாவின் பெரியம்மா என்னை கூப்பிட்டு "நாகராஜா, சுசீந்தரம் high school க்கு போக போறியாமே ... பாத்துடா. அங்க உள்ள பயக்கள் எல்லாம் ரொம்ப சப்பட்டை .. நம்மாத்து கணேசன் சாப்பாட்டு மேல மீனை தூக்கி போடரதுகள் , இவனை அப்பள கிச்சன் , அப்பள கிச்சன் நு வட்ட பேர் வச்சு கூப்பிடரதுகள் ..ஒரு நாளைக்கு நான் ஸ்கூல்க்கு போய் நல்லா சண்டை பிடிச்சி விட்டுட்டேன் .. சார பாத்து சொல்லிட்டு வந்து இருக்கேன் .. நம்மாத்து கணேசன், ஒரு பாவம்.. அவன் உண்டு அவன் வேலை இருக்கறவன் .. அவன்கிட்ட போய் வம்பு இழுப்பாளா..அதுனால தான் சொல்றேன் .. நீ ரொம்ப ஜாகிரதையா இருக்கணும்" என்று பயமுறுத்தினாள். பற்றாக்குறைக்கு அப்பள கிச்சன் கணேசன் என்னை கூப்பிட்டு .. "நாகராஜா .. A sectionakku மட்டும் போகாம பாத்துக்கோ .. B க்கு போய்டு அது தான் bestu.. ஏன்னா A க்கு ஜவகர் வருவன் .. சும்மா பிரிச்சு எடுத்துடுவான் .. அடி எல்லாம் முளில தான் ...அதே மாதிரி சின்னம்மை .. அவ அடிக்கமாட்ட .. நல்ல நுள்ளி விடுவா.. அடுத்த நாளைக்கு நல்ல பழுத்துடும்..நான் எவ்வளவு அடி வாங்கி இருக்கேன் தெரியுமா .. அது தான் சொல்றேன் .. A க்கு மட்டும் போகம பாத்துக்கோ .. A க்கு மட்டும் வந்த .. நீ செத்த.." என்று மிரட்டினான். "இதோ பாத்தியா .. இங்கிலீஷ் essay ரெண்டு பக்கத்துக்கு. fulla மனப்பாடம் பண்ணி எழுதணும். ஒம்பதாம் Class வா நீ செத்த " என்றான். இவனிடம் நான் எத்தனை முறை சாக வேண்டும் என்று புரிய வில்லை.

ஸ்கூல் admission கிடைத்தது .. 6 'A' க்கு தான். எனது அப்பா என்னிடம் இருபத்தி மூன்றாவது முறையாக சொன்னார் "ரோடு கிராஸ் பண்றதுக்கு முன்னாடி ரெண்டு பக்கமும் பாக்கணும்.. தூரத்துல வண்டி வரது தெரிஞ்சாலும் நீ கிராஸ் பண்ண கூடாது ..ரெண்டு பக்கமும் வண்டி இல்லன மட்டும் தான் நீ கிராஸ் பண்ணனும். பயக்க சாடுவாங்க.. நீ சாட கூடாது.. மத்யானம் சாப்பாடு முடிஞ்சு சும்மா கிளாஸ் ரூம்ல ஒக்காந்து இருக்கணும் .. ஸ்கூல்க்கு வெளில வர கூடாது .. ஸ்கூல்க்கு வெளில வண்டிங்க தாறு மாற போகும்.. அதுனால ஸ்கூல்க்கு உள்ளேயே தான் இருக்கணும் .. கண்டிப்பா தெப்ப குளம் பக்கத்துல போய்ட கூடாது. பொண்ணுகுட்டிட்ட சொல்லி இருக்கேன்.. டெய்லி பொண்ணுகுட்டி கைய பிடிச்சிண்டு தான் போகணும் .. வரும் போது அவ கைய பிடிச்சிண்டு தான் வரணும்" என்றார். எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினேன்.

பொண்ணுகுட்டியுடன் தான் (ஆனால் கையை பிடிக்காமல்) தினமும் ஸ்கூல்க்கு சென்று வந்தேன்..ஸ்கூலில் பொண்ணுகுட்டியின் நண்பர்கள் எல்லாம் நான் அவளது தம்பி என்றே நினைத்து விட்டார்கள். ஸ்கூலில் ஏதாவது சண்டை என்றால் கூட நான் அவளிடம் தான் சென்று புகார் சொல்லுவேன். இந்த முறை ஜவஹர் 6A க்கு வரவில்லை என்று தெரிந்து கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். தமிழ்க்கு கோலப்பன் பிள்ளை சார் வந்தார் .. சற்று குள்ளமாக இருப்பார் ..ஆனால் நல்ல வாட்ட சாட்டமாக இருப்பார் . வேட்டி தான் கட்டுவார்..நல்ல கனத்த சரீரம் .. சத்தம் போட்டு பாடம் எடுக்கும் பொழுது நல்ல சாரல் மழை அவர் வாயில் இருந்து அடிக்கும் . "ய ர ல வ ழ ள இடையினம் ... லே .. அங்க என்னல பரக்க பாக்க ...நீ சொல்லு ய ர ல வ ழ ள இடையினம் .... 'ல' இல்லலே .. 'ழ' சொல்லு .. லே நீ டெய்லி நாக்கு வழிப்பயாலே ...எங்க நாக்க காட்டு .. ழ வர மாட்டேங்கு உனக்கு எல்லாம் எதுக்குல high school.. உன் பேரு என்னல .. என்ன அருளா ... என்ன ஊருல உனக்கு .. வ'லு'க்கம்பாரையா?... வழுக்கம்பாறைலே .. ஊரு பேர சொல்ல தெரியல உன்னை எல்லாம் pass ஆக்கி விட்டுட்டான் உங்க schoola..".

அவருக்கு எல்லாரும் அவரை எங்கு பார்த்தாலும் வணக்கம் வைக்க வேண்டும். லேய் .. நீங்க எல்லாம் பெரிய பயக்களாகி நாளைக்கு என்ன பாத்த வணக்கம் வைப்பீங்களாலே .. நேத்திக்கு ஒரு பய்யன பாத்தேன் ..எங்கிட்ட படிச்ச பய தான் .. நேத்து பெருமாள் ஸ்டோர்ல வச்சு பாத்தேன்.. என்ன பாத்து பாக்காதது மாதிரி போறான் .. உங்களுக்கு எல்லாம் நன்றி வேணும்லே மொதேல்ல.. பாத்து வணக்கம் வைச்ச கொறஞ்சா போவான் அவன்.. தொண்ட தண்ணீ வத்த உங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கேன் ..அந்த நன்றி விசுவாசம் வேணும்லே .." என்பார். கோலப்பன் சார்க்கு என்னை ரொம்ப பிடிக்கும். என்னை வைத்து ஒரு நாடகம் போட்டார் .. அதில் நான் தான் hero. அது ஒரு தனி கதை.

ஏழாம் வகுப்புக்கு ஜவகர் வந்து விட்டார் .. நல்ல உயரம் .. நெத்தியில் முடியை சுருட்டி விட்டு இருப்பார் ...பெரிய குடி கறார் என்பது எனக்கு பிறகு தான் தெரிய வந்தது. கணக்கு படம் எடுத்தார்.

"நாளைக்கு வரும் போது எல்லாரும் 25m வாய்பாடு வரைக்கு படிச்சிட்டு வரணும் .. 25 வாய்பாடு 25 வரைக்கும் .. திடீர்னு கேப்பேன் 13 பெருக்கல் 15 எவ்வளவு .. சொல்லல ..பிரிச்சு எடுத்துடுவேன் .. என்றார்.".. அடடடா .. நாம் பொதுவாக 10 வது வாய்பாடு 10 வரைக்கும் தான் மனப்பாடம் செய்து வைத்து இருப்போம் .. இது என்னடா 25m வாய்பாடு 25 வரைக்கும் ..அதுவும் ஒரு நாளில் .. எல்லாருக்கும் பயம் தொற்றிகொண்டது .. நான் படித்து பார்த்தேன் .. 13 வாய்பாடு தாண்ட முடிய வில்லை .. அடுத்த நாளைக்கு வந்தார் .. வகுப்பே அமைதியாக இருந்தது ..ஒருவனை பார்த்து "லே சொல்லுல 16 பெருக்கல் 7 எவ்வளவுல"? அவன் முழித்தான் ... "இங்க கம்பு எங்கல.. எவம்லே leader இங்க.." தரன் என்ற பயன் எழுந்து "நான் தான் sir.".. "எங்கல கம்பு ..?" "சார் கம்பு உடைஞ்சு போச்சு sir..".."உடைஞ்சு போச்சா ..நாளைக்கு இங்க நல்ல ஒரு கம்பு இருக்கணும் ..இல்ல உன்ன தொரத்தி விட்ருவேன் ..இப்போ 8A ல ஒரு கம்பு இருக்கும் ..அத வாங்கிட்டு வா என்றார் .." அன்று பெரும்பாலும் எல்லாருக்கும் நல்ல அடி விழுந்தது .. அடி என்றால் அடி கையில் இல்லை .. முளில .. அப்பபா .இன்னும் வலிக்கறது ..ஒன்று இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரை காணவில்லை .அவருக்கு பதிலாக ஆறுமுகம்பிள்ளை சார் வந்தார் . ஜவகரக்கு ஏதோ பெரிய நோய் என்றும் ஒரு 6 மாதத்திற்கு அவர் school பக்கம் வர மாட்டார் என்றும் கேளிவ்பட்டேன் .. அப்பாடா .. எனது பிரார்த்தனை பலித்து விட்டது.



எட்டாம் வகுப்புக்கு கிளாஸ் சார் ஆறுமுகம் பிள்ளை சார் . மாணவர்களுடன் கிரிக்கெட் பேசுவார், ஈராக் war பற்றி சொல்லுவார். Invention க்கும் Discovery க்கும் உள்ள வித்யாசம் சொல்லுவார். அழகாக board இன் நடுவே ஒரு கோடு பிரித்து ஆங்கில பாட கேள்வி பதில்களை எழுதி போடுவார்.. பொறுமையான மனிதர்.. எப்போதாவது அவர் பொறுமை இழக்கும் போது நன்றாக பிரித்து எடுத்து விடுவார். ஒரு முறை அவரது பொறுமையை சோதித்து நல்ல அடி வாங்கி இருக்கிறேன்.

இவர்களில் குருசாமி சார் பற்றி நான் சொல்லியாக வேண்டும். குருசாமி சார் எங்களுக்கு எட்டாம் வகுப்பில் வரலாறு எடுத்தார். குருசாமி சார்க்கு ஒல்லியான தேகம்..வேட்டி தான் கட்டுவார்..நல்ல முன்வழுக்கை.. நல்ல வேகமாக நடப்பார்.. பசங்களுக்கு இவர் என்றால் கொஞ்சம் பரிகாசம் தான்...

"சார் நீங்க பீடி குடிப்பீங்களா.. ?".

"உனக்கு ஏம்ல அக்கறை .."

"இல்ல சார் .. நீங்க பீடி குடிப்பீங்கனு நம்ம உமா சங்கர் சொல்லுதான் ..அதா சார் கேட்டேன் "

"உன் சோலி என்ன உண்டோ அத பாருல ..காலாண்டு பரிச்சைல எத்தினை பாடத்துலல நீ failu..? மொதேல்ல படிக்கற வழிய பாருல ..எட்டாம் கிளாஸ் பாஸ் ஆகணுமா வேணாமா"?

ஒரு முறை அரையாண்டு தேர்வு நடந்து கொண்டு இருந்த சமயம். தேர்வு சமயத்தில் எங்களை பிரித்து வேறு வகுப்புக்கு அனுப்பி பிற வகுப்பு மாணவர்களுடன் தேர்வு எழுத சொல்லுவார்கள். குருசாமி சார் மதியம் சாப்பாடு முடிந்து வேகமாக சென்று கொண்டு இருந்தார். நான் "குருசாமி" என்று சத்தமாக கூப்பிட்டு விட்டு ஓடி விட்டேன். ஒரு பதினைந்து நிமிடம் கழித்து தேர்வு நடக்கும் வகுப்புக்கு வந்தேன். எல்லாரும் "வெங்கடாசலம் குருசாமி சார் பேர் சொல்லி கூப்பிட்டம்லே " என்று பெருமையாக சொன்னார்கள். அடுத்து நாளும் அதே போல் "குருசாமி" என்று சத்தமாக கூபிட்டுவிட்டு ஓடி விட்டேன். வகுப்பில் எனது பெருமை உயர்ந்தது. அடுத்த நாளும் அவர் வரும் போது அதே போல் சத்தமாக அவர் பெயரை கூப்பிட்டு விட்டு வழக்கம் போல் பதினைந்து நிமிடம் கழித்து வந்தேன். வகுப்பு மிகவும் அமைதியாக இருந்தது. குருசாமி சார் எனக்காக காத்து கொண்டு இருந்தார். "அம்பி.. இங்க வா. நீ தானா என்ன பேர் சொல்லி கூப்பிட்டது.. இங்க வா... நாம ஹெட் மாஸ்டர் ரூம்க்கு போலாம்" என்று சொல்லி என் கையை பிடித்து தர தர வென இழுத்து சென்றார். "சார்.. தெரியாம சொல்லிட்டேன் சார்.. மன்னிச்சிருங்க சார்.. உங்க கால்ல வேணும்னாலும் விழுகேன் சார்.. ஹெட் மாஸ்டர் ரூம் வேணாம் சார்.." என்று கெஞ்சினேன். அவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ள வில்லை. ஹெட் மாஸ்டர் ரூமில் ஹெட் மாஸ்டர் இல்லை.

"உன் யோகம்ல .. சார் இல்ல. .நீ இப்படி இந்த பரீக்ச்சை எழுதுகன்னு பாக்கேம்லே.. உனக்கு நான்னா இளக்காரமா போச்சோ.. "

"சார் தெரியாம பண்ணிட்டேன் சார். " என்று அழ ஆரம்பித்தேன். .அப்போது அங்கு காசி முத்து சார் வந்தார். குருசாமி சார் அவரிடம் "அம்பி என் பேர் சொல்லி கூபிடுகான் சார். நானும் சின்ன பயன்னு ரெண்டு நாள் விட்டுட்டேன்.. இவன் என்னடான தலைக்கு மேல ஏறிகிட்டு இருக்கான் .. சார்ட்ட சொல்லி இவன் TC கிழிச்சு கொடுத்துட்டு தான் எனக்கு இன்னிக்கு மறு வேலை." என்றார். காசி முத்து சார் எனக்கு supporttukku வந்தார் . "சார், இவன் நல்ல படிக்க கூடிய பயன் ஆச்சே..எம்லே வெங்கடாசலம், சார் பேர் சொல்லி எம்லே கூப்பிட்ட. " என்று சத்தம் போட்டார் . "சார்.. தெரியாம பண்ணிட்டேன் சார்.. மன்னிச்சு விட்டுருங்க சார்.. இன்னும் கொஞ்ச நேரத்துல பரீக்சை ஆரம்பிச்சுடும் சார்" என்று பெரிதாக அழுதேன். ஒரு வழியாக குருசாமி சார் மனசு இறங்கி வந்து என்னை பரீக்ஷை எழுத அனுப்பி வைத்தார்.

எனக்கு இங்கிலீஷ் மட்டும் பெரும் பிரயத்தனமாக இருந்தது. தமிழில் நல்ல சக்க போடு போட்டு போட்டு வந்த எனக்கு இங்கிலீஷ் மண்டையில் ஏறவே மாட்டேன் என்றது. இன்றும் நான் ஒரு குறளை அலகு பிரித்து நேர் நேர் தேமா, நிறை நேர் புளிமா என்று வாய்பாடு எழுது விடுவேன். மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருவது பண்பு தொகை எனப்படும். சுடு காடு, சுடும் காடு, சுடுகின்ற காடு, இது மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருவதால் சுடு காடு பண்பு தொகை எனப்படும். இன்னும் வினைத்தொகை, ஆகுபெயர் நினைவில் இருக்கிறது. ஆனால் இங்கிலீஷ்க்கு ரொம்ப கழட்ட பட்டேன். "Method மாமா" (சிவதாணு பிள்ளை சார் பட்ட பெயர்) ரொம்ப கழ்டப்பட்டு Direct Speech to Indirect Speech conversion "சொல்லி கொடுத்தார்.

Direct Speech ல இருந்து Indirect ஸ்பீச் மாத்தும் போது "that" போடணும். Apostrophies எடுத்துடனும். பேருக்கு பதிலா "ஹி", "ஷி" போடணும். இந்த மூணு ஸ்டேப் பண்ணினாலே போதும் உங்களுக்கு இரண்டு மார்க் போட்டுடுவான். எனக்கு இந்த மூணு ஸ்டேப் மட்டும் தான் புரிந்தது. நான் கடைசி வரை Direct speech to indirect Speechkku இரண்டு மார்க் தான் வாங்கினேன்.

உங்களுக்கு நான் ஹரி சார் பற்றி சொல்லியாக வேண்டும். ஹரி சார் P T சார். வயது ஐம்பத்து ஐந்து இருக்கும். eppozhudhum தூங்கி வழிவது போல இருப்பார். ஆன்மிகம், தியானம் என்று பேசுவார். கோலப்பன் பிள்ளை சார் போட்ட நாடகத்தில் ஒரு ஆங்கில dialogue எழுதி கொடுத்து என்னை பேசி நடிக்க சொன்னார். நாடகம் முடிந்து பல நாட்கள் ஆகி விட்டது. எப்பொழுது என்னை பார்த்தாலும் என்னை கூபிடுவார்..அந்த சமயத்தில் எந்த சார் போனாலும் அவரை கூப்பிட்டு, "லே.. நம்ம வசனத்தை சொல்லுல" என்பார். நானும் அதை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி காட்டுவேன். "பாத்தீங்களா சார்.. பயனுக்கு இங்கிலீஷ் வரவே இல்லை.. நம்ம ட்ரைனிங் ...இங்கிலிஷ்ல எப்படி polandhu கட்டுகானு பாத்தீங்களா சார்" என்பார். அந்த வாத்தியாரும் "ஆமாம் சார்.. நீங்க பெரிய ஆளு சார்" என்று சொல்லி விட்டு தலயில் அடித்து கொண்டு சொல்லுவார். இது இதோடு நின்று இருந்தால் பரவா இல்ல. ஒரு நாள் வகுப்பிற்கு ஒரு மாணவன் வந்து "சார் வெங்கடாசலம் இந்த கிளாஸ் தானா சார்.. ஹரி சார் கூட்டிட்டு வர சொன்னார் 10A ல சார் இருக்காரு" என்றான். 10A சென்றேன். ஹரி சாரை பார்த்து "வணக்கம் சார்" என்றேன். "இங்க வாலே.. எல்லாருக்கும் சொல்லு.. நீ என்ன பாக்கறதுக்கு முன்னால எப்படி இருந்தே. " என்று கேள்வி கேட்டார். "சார் உங்கள பாக்கறதுக்கு முன்னாடி இங்கிலீஷ் ந எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காம இருந்தது .. நீங்க எனக்கு அந்த இங்கிலீஷ் வசனம் சொல்லி கொடுத்த உடன எனக்கு இங்கிலீஷ் ரொம்ப பிடிச்சு போச்சு.. இப்போ டெய்லி Dictonary பார்த்து 10வார்த்தைக்கு அர்த்தம் படிக்கறேன் சார்." என்று தாறு மாறாக பொய் சொன்னேன். "நம்ம பய்யன பார்த்தீங்களா .. எல்லாம் நம்ம ட்ரைனிங்" என்று பீத்தி கொண்டார் . அவரை பார்க்கும் பொழுது எல்லாம் நான் ஓடி ஒளிந்து கொள்வேன். அப்பொழுதும் நேரடியாக வகுப்புக்கு அழைப்பு வரும். ஒவ்வருவரும் ஒவ்வரு விதம் .. இவர் இப்படி. இன்றும் எனக்கு அந்த வசனம் ஞாபகம் இருக்கிறது.

பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பட்டபெயர்கள் ரொம்பவே வாடிக்கையானது. எனது பள்ளியும் இதற்கு விதிவிலக்கு அல்ல."சூத்துஇல்லா" சுப்பையா, பல்லன், கரடி, அகத்தியன், "loose" மேரி(லூயிஸ் மேரி) , சுண்டுட்டி, methodமாமா என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. யாரோ ஒரு புண்ணியவான் இது போல பேர் வைத்து விடுகிறான். இந்த பேர் அவர்கள் retired ஆவது வரை நீடிக்கறது.

இன்னும் எத்தனயோ ஆசிரியர்கள், ஆனால் anaivarai பற்றியும் நான் எழுத ஆரம்பித்தால் இது ஒரு நாவலாகி விடும்.. உங்களுக்கும் இது போர் அடித்து விடும். ஆனால் நான் கொஞ்சம் யோசித்து பார்க்கிறேன். இந்த ஆசிர்யர்கள் எல்லோரும் முப்பது, முப்பத்தைந்து வருடங்களாக ஒரே பள்ளியில் வேலை பார்த்தவர்கள். எத்தனை ஆயிரம் மாணவர்களை இவர்கள் பார்த்து இருப்பார்கள். method மாமா எத்தனை ஆயிரம் பேருக்கு Direct Speech to Indirect Speech சொல்லி கொடுத்து இருப்பார்? endha விதமனாக சந்தேகமும் இல்லாமல் இவர்கள் ஒரு ஆலமரம் தான். நம்மை செம்மை படுத்தி நம்மை எதிர்காலத்துக்கு தயார்படுத்தி விடுபவர்கள் இவர்கள் தான். சும்மாவா சொன்னார்கள் மாதா, பிதா, குரு தெய்வம் என்று ?

அடுத்த முறை கோலப்பன் பிள்ளை சார்ஐ பார்க்கும் பொது எனக்கு கொஞ்சம் ஞாபாகம் படுத்துங்கள். அவருக்கு வணக்கம் வைக்க வேண்டும். "Method" மாவிடம் Direct Speech to Indirect ஸ்பீச்இல் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது. கேட்கலாம் என்று இருக்கிறேன். குருசாமி சார் இடம் மனபூர்வமாக ஒரு முறை மன்னிப்பு கேட்க வேண்டும் . என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?

2 கருத்துகள்:

Blogger Ramya கூறியது…

Hei ppl...nan ivanuku vecha peru 'ANT'...ANT AMBi nu neenga koopdalam ;) btw that was just amazing Venkat! vizhundu vizhundu sirichen :) though I know half the names, ivlo comicala sonnadhuku onaku oru periya OOOOh :) keep writing!

20 ஏப்ரல், 2009 அன்று AM 9:29  
Blogger supasa கூறியது…

Dear Mr.Venkatachalam

Its great to read your 'Melnilai Parauvam' and I enjoyed that since I too studied with all the teachers in SMSM Hr.Sec School (1993 +2 Batch)

After a long time, I got the feeling of visiting our school.

Thanks

10 மே, 2011 அன்று AM 5:21  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு